உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - துறவறவியல்

157



"ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருளென்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு"

என்று ஒளவையாருங் கூறியிருத்தல் காண்க.

இனி, கடவுட்கொள்கை யுடையாரும் செல்வத் தொடர்பு கொண்டவ ராயின் துறவியராகார்..

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை." (குறள்.345)

செல்வத் தொடர்பால் ஊட்டம் மிகும். அது கூடாவொழுக்கத்திற்குத் தூண்டும். அதனால் ஒரு பற்றுந் துறக்க முடியாது. ஆசையும் அறாது மிகும். கூடாவொழுக்க மின்றேனும், செல்வத் தொடர்பினர் மணமிலியர் Celi- bates) அல்லது மணத் துறவியரே யன்றி முழுத் துறவியராகார். ஆதலால் அடியார் அல்லது நாயனார் என்றே அழைக்கப்படற்குரியர். இனி மண வெறுப் பாளரும் Misogamists), பெண்வெறுப்பாளரும் Misogynists) உளர்.

முற்றத் துறந்தவரே துறவியர் என்றும், முனிவர் என்றும், அடிகள் என்றும் சொல்லப்படத் தக்கவர்.

செல்வத் தொடர்பிருந்தும் சிறிதும் பற்றின்றிச் செல்வத்தைத் திருத் தொண்டிற்கும் பொதுநலத்திற்கும் பயன்படுத்தி, தவத்திருக் குன்றக்குடியடிகள் போல் இடையறாது எழுத்தாலும் சொல்லாலும் மக்கட்கு அறிவுறுத்தி வரும் துறவியர் ஒருசிலரே.

துவராடை யணிந்து இரந்து பிழைப்பவர் ஆண்டியரே யன்றித் துறவியராகார். வீடுபேறு தீவினை யொன்றுமின்றி நல்வினையே செய்யும் இல்லறத்தாலும், கண்ணப்ப நாயனார் கண்ணப்பியது போன்ற சிறப்புப் பத்திவினை யாலும், துறவறத்தினாலும் கிட்டுவதாம். அவற்றுள் இறுதியது இனி இங்குக் கூறப்பெறும்.