10
திருக்குறள்
தமிழ் மரபுரை
"கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்"
(1137)
என்னுங் குறளில் தழுவப்பெற்றுள்ளது.
"மாவும் மாக்களும் ஐயறி வினவே " (1531)
"மக்கள் தாமே ஆறறி வுயிரே" (1532)
என்று தொல்காப்பியர் வகுத்ததற்கேற்பவே, திருவள்ளுவரும் மாந்தருட் பண்பட்டவரை மக்கள் என்றும் படாதவரை மாக்கள் என்றும் பிரித்துக் கூறியுள்ளார்.
"மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்” (997)
"மக்களே போல்வர் கயவர்” (1071)
"கொலைவினைய ராகிய மாக்கள்" (329)
"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்" (420)
(2) "இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை. "
(53)
என்னுங் குறளில் வந்துள்ள ஆனால் என்னும் சொல்வடிவம் தொல்காப் பியர் காலச் செய்யுள் நடைக்கு ஏற்காமை.
(3) "ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல "
(510)
என்னுந் தொல்காப்பிய நெறியீடு, கடைக்கழகச் செய்யுளிற் போன்றே திருக்குறளிலும் கைக்கொள்ளப் பெறாதிருத்தல்.
"நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு மெழுநாளே மேனி பசந்து." (1278)
இவ் வுயர்வுப் பன்மை யாட்சியே 'மற்றையவர்கள்' (293) என்னும் இரட்டைப் பன்மையாட்சிக்கும் இடந்தந்தது.