பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

11



(4) "எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே.” (1002)

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்" (1316)

என்று மூவேந்தரும் தலைமை குன்றாத தொல்காப்பியர் கால நிலைமைக்கு மாறாக.

" பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு" (735)

என்று வேளிருங் கோசருமான குறும்பரால் மூவேந்தரும் அலைக்கப்பட்ட நிலைமையைத் திருக்குறள் குறிப்பாகக் கூறுதல்.

(5) "தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்" (256)

என்று திருவள்ளுவர் புத்தமதக் கொள்கையைக் கண்டித்தல்.

புத்தர் கி.மு.ஆறாம் நூற்றாண்டினராயினும், புத்தமதம் அசோகனால் இந்தியாவிலும் வெளியிலும் பரப்பப்பட்ட காலம் கி.மு. 273-236 ஆகும். அசோகனின் மகனும் (அல்லது உடன்பிறந்தானும் வேறு நால்வரும் இலங்கைக்கு வந்து புத்த மதத்தைப் பரப்பின காலம் கி.மு. 247 - 207. அதன் பின்னரே அம் மதம் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்திருத்தல் வேண்டும். ஆதலால், கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே திருவள்ளுவர் அதைக் கண்டித் திருக்கக் கூடும்.

(6) திருவள்ளுவர் தம் நூலின் முதலதிகாரமாகிய முதற்பகவன் வழுத்தில், 'மலர்மிசை யேகினான்' (பூமேல் நடந்தான்). 'பொறிவாயி லைந்த வித்தான்' என்னும் அருகன் பெயர்களைக் கடவுட்கு ஆண்டிருத்தல்.

ஆருகதம் என்னும் சமணமதம் புத்தமதத்திற்குப் பின்னரே தமிழகத்துட் புகுந்தது. மேற்காட்டிய இருவகைச் சான்றுகளால், திருவள்ளுவர் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டென்று கொள்வதே பொருத்தமாம். எனினும், 5ஆம் நூற்றாண்டு வரை கொள்ளவும் இடமுண்டாம்.

பிறந்தவூர்: இது இன்னதென்று தெரியவில்லை.

பெற்றோர்: இவர் இன்னாரென்று தெரியவில்லை. திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும்