பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

13



பகலில் அடையாளங் கண்டுபிடிக்கப்பட்டபின், பிறக்கும் பிள்ளைகளை யெல்லாம் உடனுடன் விட்டுவிட்டு வரவேண்டுமென்னும் நிலைப்பாடு பற்றியே நிலையான மனைவியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டாளென்று கபிலரகவல் பற்றிய கதையும் வேறுபட்டுக் கூறினும், பிறந்த பிள்ளைகள் வள்ளுவருள்ளிட்ட கபிலர் முதலிய எழுவர் என்பதில் மட்டும் ஒன்றுபடுகின்றன.


"கபில ரதிகமான் கான்குறவர் பாவை
முகிலனைய கூந்த லுறுவை - நிகரில்லா
வள்ளுவ ரௌவை வயலூற்றுக் காட்டிலுப்பை
யெள்ளி லெழுவ ரிவர்"

என்பது ஞானாமிர்தவுரை யடிக்குறிப்பு.

"யாளி – கூவற் றூண்டு மாதப் புலைச்சி
காதற் காசனி யாகி மேதினி
யின்னிசை எழுவர்ப் பயந்தோ ளீண்டே"

என்பதே ஞானாமிர்த மூலம்.

"அருந்தவ மாமுனி யாம்பக வற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றினி லன்றவ தரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே
என்னுடன் பிறந்தவ ரெத்தனை பேரெனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்
...........................
ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே
வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்திற் கள்விலைஞர் சேரியில்
சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள்
நரப்புக் கருவியோர் நண்ணிடு சேரியில்
பாண ரகத்தில் ஒளவை வளர்ந்தனள்
குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்
 வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டைமண் டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறைய ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி