20
திருக்குறள்
தமிழ் மரபுரை
"நிழலருமை வெய்யிலிலே நின்றறிமி னீசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை
1888 புல்லரிடத் தேயறிமின் போய்."
(ஒளவையார் தனிப்பாடல்)
"பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ."
(பரிமேலழக ருரைச்சிறப்புப் பாயிரம்)
"ஆலும் வேலும் பல்லுக்
குறுதி நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி"
(பழமொழி)
என்பனவும்; புலமைச் சிறப்பை.
"புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்”
என்னும் திருவள்ளுவமாலைப் பாவும்; கருத்துப் பரப்பை,
"மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து"
என்னும் திருவள்ளுவமாலைப் பாவும்; சுருங்கச் சொல்லலை.
"தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி"
என்னும் திருவள்ளுவமாலைப் பாவும்; விளங்கவைத்தலை.
"பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்”
என்னும் திருவள்ளுவமாலைப் பாவும் உணர்த்தும்.