உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

அண் - அண்ணம் = மேல்வா-; அண் அணல் = மேல்வா-. அண்ணல் = உயர்வு, உயர்ந்தோன், அரசன், கடவுள்.

அண்ணன் = பெரியோன், மூத்தோன், தமையன்.

=

அண்ணி அண்ணன் மனைவி.

அண்ணாத்தல் = மேனோக்குதல்.

அணத்தல் = தலையெடுத்து நிமிர்தல்.

அணர்தல் = மேனோக்குதல். அணரி = மேல்வா-.

=

85

அத்தாசம் = அந்தரம். அத்தாசமா-த் தூக்கிக்கொண்டு போகி றான் என்பது தென்னாட்டு வழக்கு.

அந்தரம் = ஆகாயம், தேவருலகம்.

அந்தரக்கோல் = மேலிசை நரம்பு, மேலிசை.

அம்பரம் = மேலிடம், ஆகாயம், தேவருலகம்.

(உம்பரம் - அம்பரம்)

(குதி - கதி.) கதித்தல் = எழுதல்.

(13) குரவர் பெயர்

ஒருவனுக்கு உயர்ந்தோரான ஐங்குரவருள்ளும் இரு முதுகுரவர் மிகச் சிறந்தவராதலின், அவரைக் குறித்தற்கு உயர்வு குறித்த உகரச் சுட்டின் திரிபான அகரத்தை அடியாகக் கொண்ட பல சொற்கள் கிளைத்துள்ளன.

தந்தை

தா - அக்கை

அச்சன்

அச்சி

அத்தன்

அத்தி

அப்பன்

அம்மை (அவ்வை)

ஆஞன்

அன்னி, அனி (அணி)

அன்னை (அஞ்ஞை), அனை

ஆத்தை

குறிப்பு:- (1) கோடிட்ட இடத்திற்குரிய சொற்கள் வழக்கற்றன

போலும்.