உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(2) தாயைக் குறிக்கும் சில சொற்கள் அன் ஈறு பெற்றும்

வழங்குகின்றன.

எ-டு: அக்கை- அக்கன்

அம்மை - அம்மன்

இவற்றிலுள்ள 'அன்' ஈறு ஒருகால் மறங்குறிக்க வந்திருக்கலாம்.

(3) தாயைக் குறிக்கும் பல சொற்கள் முன்னொட்டுப் பெற்றும் பெறாதும் தமக்கையையும் குறிக்கின்றன.

எ-டு: தா-

தமக்கை

அக்கை

அக்கை

தமக்கை

அச்சி

அச்சி

அவ்வை

தவ்வை (தமவ்வை)

தந்தை பெயரும் இங்ஙனம் தமையனைக் குறிக்கும்.

எ-டு: ஐயன் -தமையன்.

(4) குரவர் பெயர்கள் சில விகுதி மாறி அவர்களின் அவர்களின் உடன் பிறந்தாரைக் குறிக்கின்றன.

எ-டு: அத்தன் – அத்தை (தந்தையோ டுடன்பிறந்தவள்)

அம்மை – அம்மான் (தாயோ டுடன்பிறந்தவன்)

(5) தந்தை தா- பெயர் முன்னொட்டுப் பெற்றும் வரும்.

தம்+அப்பன் = தமப்பன் - தகப்பன்.

(தம்+ஆ-

= தா-)

(6) குரவர் பெயர்களுட் சில பிறவற்றின் திரிபாகத் தெரிகின்றன.

எ-டு: அத்தன் – அச்சன்

அம்மை - அவ்வை

அன்னை - அஞ்ஞை

(7) ஆண்பால் குறிக்கும் அன்னீறும் பெண்பால் குறிக்கும் இகர வைகார வீறுகளும், முதற்காலத்தில் குரவர் பெயர்களொடு சேர்ந்தி ருந்ததாகத் தெரியவில்லை.

எ-டு: அப்பன் – அப்பு

அம்மை - அம்மு

(8) குரவர் பெயர்கள் பாட்டன் பாட்டியரைக் குறித்தற்குப் பால் மயங்காது மீமிசையாக அடுக்கிவருவதுண்டு.