86
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
(2) தாயைக் குறிக்கும் சில சொற்கள் அன் ஈறு பெற்றும்
வழங்குகின்றன.
எ-டு: அக்கை- அக்கன்
அம்மை - அம்மன்
இவற்றிலுள்ள 'அன்' ஈறு ஒருகால் மறங்குறிக்க வந்திருக்கலாம்.
(3) தாயைக் குறிக்கும் பல சொற்கள் முன்னொட்டுப் பெற்றும் பெறாதும் தமக்கையையும் குறிக்கின்றன.
எ-டு: தா-
தமக்கை
அக்கை
அக்கை
தமக்கை
அச்சி
அச்சி
அவ்வை
தவ்வை (தமவ்வை)
தந்தை பெயரும் இங்ஙனம் தமையனைக் குறிக்கும்.
எ-டு: ஐயன் -தமையன்.
(4) குரவர் பெயர்கள் சில விகுதி மாறி அவர்களின் அவர்களின் உடன் பிறந்தாரைக் குறிக்கின்றன.
எ-டு: அத்தன் – அத்தை (தந்தையோ டுடன்பிறந்தவள்)
அம்மை – அம்மான் (தாயோ டுடன்பிறந்தவன்)
(5) தந்தை தா- பெயர் முன்னொட்டுப் பெற்றும் வரும்.
தம்+அப்பன் = தமப்பன் - தகப்பன்.
(தம்+ஆ-
= தா-)
(6) குரவர் பெயர்களுட் சில பிறவற்றின் திரிபாகத் தெரிகின்றன.
எ-டு: அத்தன் – அச்சன்
அம்மை - அவ்வை
அன்னை - அஞ்ஞை
(7) ஆண்பால் குறிக்கும் அன்னீறும் பெண்பால் குறிக்கும் இகர வைகார வீறுகளும், முதற்காலத்தில் குரவர் பெயர்களொடு சேர்ந்தி ருந்ததாகத் தெரியவில்லை.
எ-டு: அப்பன் – அப்பு
அம்மை - அம்மு
(8) குரவர் பெயர்கள் பாட்டன் பாட்டியரைக் குறித்தற்குப் பால் மயங்காது மீமிசையாக அடுக்கிவருவதுண்டு.