உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

"தெவ்வர் தேஎத்து"

103

(புறம். 6)

திசை, தேசம் என்னும் சொற்கள் பக்கம் என்னும் பொருளில் வருதலை, 'அந்தத் திசைக்கே போகமாட்டேன்' என்னும் தமிழ் வழக்காலும், 'ஏகதேசம்' என்னும் வடமொழி வழக்காலும் அறிய லாம். ஏகதேசம் = ஒருபக்கம், ஒரு பகுதி.

தேசம் என்னும் சொல் முதலாவது எல்லையைக் குறித்து, பின்பு ஓர் எல்லையில் அல்லது பக்கத்தில் உள்ள நாட்டைக் குறித்தது. ஒ.நோ: சீமை = எல்லை, நாடு.

'திக்குத் திக்கென்று அடித்துக் கொள்ளுகிறது' என்னும் வழக் குண்மையாலும், நாத்தட்டுதல் திக்குதல் எனப்படுதலாலும், திகை என்னுஞ் சொல் ககரவொலி கொண்டிருத்தலாலும், திக்கு என்னும் சொல்லும் தென்சொல்லே யென்க.

முள் - முளி வடிம்பு.

விளி

=

விளிம்பு ஓரம். விளிம்பு

(விளிம்பு)

முட்டு மட்டு = அளவு. மட்டு

-

மட்டம் = அளவு, சரியான அளவு,

தாழ்ந்த அளவு, தாழ்வு.

கடல்மட்டம், மட்டப்பலகை, மட்டக்குதிரை, மட்டத்துணி முதலிய வழக்குகளை நோக்குக.

vii. முடிதல்

உலத்தல் = முடிதல்.

உறுதல் = தொடுதல், முட்டுதல். உறு - இறு -ஈறு. இறு - இறுதி. இறுதல்

=

முடிதல்.

இறு இற-இறப்பு = சாவு.

=

இறுத்தல் = கடமையைத் தீர்த்தல், வரி செலுத்துதல். இறு - இறை கடமை (வரி).

இறுத்தல் = வழிச்செலவை விட்டிருத்தல், தங்குதல். இறு இறை இறைவன் = எங்குந் தங்கியிருப்பவன்.

உறு-அறு

அறுதி = முடிவு.

அறு – அறவு = நீக்கம்.

=