சுட்டொலிக் காண்டம்
xiv. வெண்மை
149
ஒளியானது வெண்மையா யிருத்தலால், ஒளியை அல்லது விளக்கத்தைக் குறிக்கும் சொற்களினின்று (அல்லது சொல்லடி களினின்று) வெண்மையைக் குறிக்குஞ் சொற்கள் பிறந்துள்ளன.
நெருப்புச் சிவந்ததென்றும், கடுமையான கதிரவனொளி வெண்மை யானதென்றும், பொதுவாகக் கொள்ளப்படும்.
குரு குருகு = வெண்மை.
துல் - துல்லியம் = வெண்மை.
துள் - தெள் - தெளி. தெளிதல் = வெண்மையாதல்.
புல் - பல் - பால் = வெண்மை.
பால் - வால் = வெண்மை.
முள் - முரு - முருந்து = வெண்மை.
முள் -விள் - விளர். விளர்த்தல் = வெண்மையாதல்.
விள் - வெள் - வெண்மை. வெள் - வெள்ளை. வெள் - வெளு.
XV. வெளுத்தல்
விள் - விளர். விளர்த்தல் = வெண்மையாதல், வெட்குதல்.
விள் - விடி -விடியல் = கரிய இருள் நீங்கி வெளிய ஒளி தோன்றல்.
விள்
வெள் = வெள்ளென
=
வெள்ளெங்காட்டி = விடியற்காலை.
விடிய. வெள்ளெனக் காட்டி
வெள்
வெளு. கிழக்கு வெளுத்தல்
=
விடியுமுன் கீழ்த்திசை
வெள்ளையாதல்.
வெளுத்தல்
=
வெண்ணிறமாதல், வண்ணான் துணிகளை
வெள்ளையாக்குதல் அல்லது துப்புரவாக்குதல்.
வெள் = வெள்கு. வெள்குதல்
=
நாணத்தால் முகம் வெளுத்தல்.
―
வெள்கு வெட்கு - வெட்கம். வெள் - வெளிறு. வெளிறுதல் = சிறிது வெண்ணிறமாதல்.
xvi. வெண்மையான பொருள்கள்
உல் - எல் - எலும்பு - என்பு.
எல் - எலி எலி = வெள்ளையான எலிவகை. கருப்பை = காரெலி.