உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உறு உறை = புளித்த மோர்.

குள் - கள் - கடு. கடுத்தல் = புளித்தல். கடு - காடி = புளிப்பு, புளித்த

கள், புளித்த கஞ்சி, ஊறுகா-.

கடு - காட்டம் = கடும்புளிப்பு.

சுள் - சுடிகை = பனங்கள். சுள் - சூழிகை = கள்.

- =

சுர் -சூர் = காட்டம்.

"சூர்நறா வேந்தினான்'

22

(umflum. 6:72)

சுள் - சுண்டு = கள். சுண்டுசோறு = சுட்சத்துள்ள சோறு.

சுண்டு - சுண்டம் சுண்டம் = கள். சுண்டகன் = கள்ளிறக்குவோன்.

சுண்டு - சுண்டி. சுண்டியுண்டை = புளிக்க வைக்குங் குளிகை. சுண்டு - சுண்டை = கள்.

சுண்டி - சொண்டி = சுண்டியுண்டை.

கடும் புளிப்பிற்குத் தாக்குவது போன்ற உறைக்கும் திறனுண்மை பற்றியே, பாலைப் புளிக்கவைத்தலைப் பிரைகுத்துதல் என்றும் பிரை தைத்தல் என்றும் கூறுவர். தைத்தல் குத்துதல்.

தை (த-) - தயிர் = பிரை தைத்த பால், ஒ.நோ: மை -மயிர்.

xxvi. சினத்தல்

சினம் தீயைப் போன்றதாதலின், எரிதலைக் குறிக்கும் சொற்கள் சினத்தையும் குறிப்பனவாயின.

"சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்."

என்று வள்ளுவர் கூறுதல் காண்க.

(குறள். 306)

உல்

உலறு. உலறுதல் = சினத்தல்.

உருத்தல் = சினத்தல். உருத்திரம் = சினம். உரு உருப்பு - உருப்பம்

=

சினம்.

உல் என்னும் வேரினின்று பிறந்த அழலுதல் அனலுதல் அன்றுதல் எரிதல் முதலிய வினைகளும் சினத்தலைக் குறிக்கும்.

குருத்தல் = சினத்தல்.