156
—
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
உறு உறை = புளித்த மோர்.
குள் - கள் - கடு. கடுத்தல் = புளித்தல். கடு - காடி = புளிப்பு, புளித்த
கள், புளித்த கஞ்சி, ஊறுகா-.
கடு - காட்டம் = கடும்புளிப்பு.
சுள் - சுடிகை = பனங்கள். சுள் - சூழிகை = கள்.
- =
சுர் -சூர் = காட்டம்.
"சூர்நறா வேந்தினான்'
22
(umflum. 6:72)
சுள் - சுண்டு = கள். சுண்டுசோறு = சுட்சத்துள்ள சோறு.
சுண்டு - சுண்டம் சுண்டம் = கள். சுண்டகன் = கள்ளிறக்குவோன்.
சுண்டு - சுண்டி. சுண்டியுண்டை = புளிக்க வைக்குங் குளிகை. சுண்டு - சுண்டை = கள்.
சுண்டி - சொண்டி = சுண்டியுண்டை.
கடும் புளிப்பிற்குத் தாக்குவது போன்ற உறைக்கும் திறனுண்மை பற்றியே, பாலைப் புளிக்கவைத்தலைப் பிரைகுத்துதல் என்றும் பிரை தைத்தல் என்றும் கூறுவர். தைத்தல் குத்துதல்.
தை (த-) - தயிர் = பிரை தைத்த பால், ஒ.நோ: மை -மயிர்.
xxvi. சினத்தல்
சினம் தீயைப் போன்றதாதலின், எரிதலைக் குறிக்கும் சொற்கள் சினத்தையும் குறிப்பனவாயின.
"சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்."
என்று வள்ளுவர் கூறுதல் காண்க.
(குறள். 306)
உல்
—
உலறு. உலறுதல் = சினத்தல்.
உருத்தல் = சினத்தல். உருத்திரம் = சினம். உரு உருப்பு - உருப்பம்
=
சினம்.
உல் என்னும் வேரினின்று பிறந்த அழலுதல் அனலுதல் அன்றுதல் எரிதல் முதலிய வினைகளும் சினத்தலைக் குறிக்கும்.
குருத்தல் = சினத்தல்.