38
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
சுட்டடிச் சொல்லாக்கத்திற் கேதுவாக,
முச்சுட்டொலிகளும்
முதலாவது அடைந்த திரிபு கடைமிகை.
எ-டு: ஆ-ஆன் (ஆங்கு), ஆது.
சுட்டொலிகள் முதல் நிலையில் நெடிலாயிருந்தன என்பது முன்னரே கூறப்பட்டது.
அடுத்தபடியாக நிகழ்ந்த சுட்டொலித் திரிபுகள் திரிதலும் இடைமிகையும்.
எ-டு: ஆங்கு,
ஆண்டு.
ஞாங்கர் (ஆங்கர்) என்னும் முதன்மிகை புலவர் புனைவாகத் தெரிகின்றது.
நாளடைவில் முச்சுட்டொலிகளும் குறுகின.
எ-டு: ஆ - அ, ஆது - அது, ஆங்கு - அங்கு.
-
அதா அந்தா, அதோ அந்தோ முதலிய திரிபுகளால், சுட்டுச் சொற்களின் இடைமிகை யுணரப்படும்.
சுட்டொலிகள் குறுகியபின், உகரச்சுட்டினின்று உல் என்னும் ஒப்புயர்வற்ற மாபெரு மூலவடி தோன்றிற்று. அது பின்பு, உகரத்தொடு கூடி மொழி முதலாகும் அறுமெ-யோடுஞ் சேர்ந்து. குல் சுல் துல் நுல் புல் முல் என்னும் அறுபெருங் கிளையடிகளைத் தோற்றுவித்தது. அவற்றினின்று, முற்கூறிய ஊகாரச் சுட்டுக்கருத்து ஒவ்வொன்றிற்கும், கவையுங்கொம்பும் கிளையுஞ்சினையும் போத்துங் குச்சும் இணுக்குங் கொழுந்துமாக, பற்பல சொற்கள் கிளைத்துந் தோன்றியுமுள்ளன. லகரமெ-யினின்று எங்ஙனம் பிறமெ-கள் திரி கின்றன என்பது 'செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகளில் காட்டப் பெறும்.
மூவின மெ-களுள் வல்லினமெ- தமிழ்ச்சொற்கு ஈறாவ தில்லை. மெல்லின மெ-களுள் மகரமும் இடையின மெ-களுள் லகரமும், ஒலித்தற்கெளியவாம். இவ் விரண்டனுள் மகரமே முந்திய தாயினும், சொல்லாக்கத்திற்கு லகரவீற்றடியே பெரும்பாலும் பயன் படுத்தப் பெற்றுள்ளது.
சில கருத்துகட்குச் சில கிளையடிச் சொற்கள் மறைந்துவிட்டன. அவை வழங்கின நிலம் இந்துமாவாரியில் மூழ்கிப் போனமையாலும்,