சுட்டொலிக் காண்டம்
41
பொது – பொதுவன் - குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடைப் பட்ட முல்லைநிலத்தான்.
பொது
பொதியில் (பொது
இல்) = வழக்காளிக்கும் எதிர்
வழக்காளிக்கும் பொதுவான அம்பலம்.
முன் - மன். மன்னுதல் = பொருந்துதல்.
மன் மான். மானுதல் = ஒத்தல்.
V. துலை (தராசு)
துலையின் சிறப்பியல்பு இருபுறமும் ஒத்தலாதலால், ஒத்தலைக் குறிக்குஞ் சொல்லினின்று துலைப்பெயர் தோன்றிற்று.
"துலைநா வன்ன சமநிலை"
என்று ஆத்திரேயன் பேராசிரியரும்,
"சமன்செ-து சீர்தூக்கும் கோல்
என்று திருவள்ளுவரும், கூறுதல் காண்க.
""
ஒப்பு - ஒப்பராவு. ஒப்பராவுதல் = தராசு செ-தல்.
ஒப்பராவி = தராசு செ-வோன்.
துல்லுதல் = பொருந்துதல், ஒத்தல்.
-
துல் - துல்லியம் துல்லிபம் = ஒப்பு. துலை = ஒப்பு.
துல் - துலம் = நிறைகோல், துலா நிறை.
(குறள்.118)
துல் - துலா = நிறைகோல், நிறைகோல் போன்ற ஏற்றம், நிறை கோல் வடிவான ஓரை.
கைத்துலா ஆளேறுந்துலா முதலிய ஏற்ற வகைகளை நோக்குக. துலாக்கோல் = கழுத்துக்கோல் என்னும் நிறைகோல்.
துலாக்கட்டை = துலாக்கோல் போன்ற வண்டி யச்சுக்கட்டை. துலா - துலாம் = நிறைகோல், துலாவோரை, ஏற்றம், ஒரு நிறை. துலாம் - துலான் = ஒரு நிறை.
துல் - துலை = நிறைகோல், துலாவோரை, ஒரு நிறை, ஏற்றம். துலை - தொலை = ஒப்பு.