உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் முடங்கிக் கிடத்தலாவது சோம்புதலும் பயன்படாது ஓரிடத்துத் தங்குதலும்.

யங்குதிணை யுயிரிகள் தூங்கும்போது பொதுவா-க் கைகால் முடக்கிக்கொள்வதால், முடங்கற் கருத்தில் மடிமைக் கருத்துத்

தோன்றிற்று.

இனி, மடக்குண்டு கிடத்தலே முடங்கிக் கிடத்தல் எனினுமாம். முடங்குதல் = தூங்குதல், வழங்காது ஓரிடத்தமர்தல்.

பணமுடக்கம் = பணம் வழங்காது ஓரிடத்துத் தங்குதல்.

முள் - முடு - முடி - மடி. மடிதல் = தூங்குதல், சோம்புதல்.

= சோம்பல், கட்டுக்கடைச் சரக்கு.

மடிவீசுதல் = கட்டுக்கடைச் சரக்கு நாறுதல்.

xi. பன்முறை குறித்தல்

மடி

ஒன்றைத் திரும்பத் திரும்பச் செ-தல். அதைப் பன்முறை செ-தலாதலால். திரும்பற் கருத்துச் சொல் பன்முறைக் கருத் துணர்த்தும். திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பவும், திரும்பியும். திருப்பி, திருப்பித் திருப்பி, திருப்பியும்.

திரிய, திரியத் திரிய திரியவும்.

மடங்கி, மடங்கி மடங்கி.

மடக்கி,மடக்கி மடக்கி.

மடக்கு

=

ஒரு சொல்லைப் பொருள் வேறுபட மடக்கி மடக்கிக்

கூறும் அணி.

மறிந்து.

மறித்து, மறித்தும்.

(முறு -மறு) மறுக்க, மறுத்து, மறுத்தும்.

மீள, மீண்டும், மீண்டும் மீண்டும்.

மீட்டும்.

வளைய, வளைய வளைய, வளைத்து, வளைத்து வளைத்து.