உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

நீ செய்து நீர் செய்து

நீ செய்யும்

நீர் செய்யும்

135

உம் என்பது எதிர்கால முணர்த்தும் உகரவடிச் சுட்டுச் சொல். ஒ.நோ: “உம்மை எரிவாய் நிரயம்”.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, செய்யும் என்னும் முற்று முன்னிலைகளிலும் படர்க்கைப் பலர்பாலிலும் வழக்கற்றுவிட்டது. மலையாளத்தில் இன்றும் வழங்குகின்றது.

தன்மை

இறந்தகால வினையெச்சங்களாக இப்போது கூறப்படு பவை, செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்பவை. இவற்றுள், ஈற்றது தவிர ஏனையவெல்லாம் தொழிற்பெயராகவே தோன்றுகின்றன. அவற்றை முறையே வீழ்து, முடிபு, உணா, உறூ (உறூஉ) என்பவற்றோடு ஒப்புநோக்குக. செய்து + என = செய்தென = செய்தானென்னும்படி.

உறூறு, மரூஉ முதலிய வடிவங்களை நோக்கின், பண்டு சில வினைப்பகுதிகள் ஈற்றுயிர்க்குறில் நீண்டும் தொழிற் பெயரானது போல் தெரிகின்றது. இதுவும் அசையழுத்தம்.

சென்று, கண்டு,ஓடி, போய் என்னும் வடிவங்களை, குன்று, வண்டு, வெகுளி, பாய் என்னும் தொழிற்பெயர்களுடன் ஒப்புநோக்குக. பின்னவற்றுள் வெகுளியொழிந்தவை தொழிலாகு பெயர்கள்.இ-ய். கா: போகி - போய், தாவி -தாய்.

பிற்காலத்தில் ஐம்பாற் சுட்டுப்பெயர்களான பாலீறுகள் இறந்த கால வினைகளுடன் சேர்க்கப்பட்டன.

கா : செய்து + ஆன் = செய்தான் =செய்கையையுடை யவன். சினந்தான் = சினந்த செயலோன்.

இறந்தகால வினைகள் பாலீறு பெற்றுச் சிறிதுகாலஞ் சென்ற பின், எதிர்கால வினைமுற்றுகளும் பாலீறு பெற்றன.

கா : செய்யுமான் - செய்ம்மான் - செய்வான். செய்யுமாள் - செய்ம்மாள் - செய்வாள். செய்யுமார் - செய்ம்மார் - செய்வார்.

செய்யுமது செய்ம்மது - செய்வது.