உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

நுல்2 (துளைத்தற் கருத்துவேர்)

நுல் - நொல் - நொலை = உட்டுளையுள்ள அப்பவகை. நொலை- நொலையல் (பிங்.).

நொல்- நெல் - நெலி. நெலிதல் = கடைதல்.

நெலி - ஞெலி. ஞெலிதல் = 1. தீக்கடைதல். “ஞெலிதீ விளக்கத்து” (புறம். 247). 2. குடைதல் (அக. நி.). 3. உரசுதல். “ஞெலிகழை” (ஐங். 307).

ஞெலி = உரசித் தீப்பற்றும் மூங்கில். “ஞெலிசொரி யொண்பொறி” (அகம்.39).

நெல்- நெர்- நெரு-நெருப்பு = மூங்கில் ஒன்றோடொன்று உரசிப் பற்றும் தீ.

நொல்- நோல்- நோலி- நோனி-வ.யோனி. இச் சொற்கு 'யு’(to unite) என்பதை வடவர் வேராகக் காட்டுவது பொருந்தாது.

நூல் - நல் - நல்லி = உட்டுளையுள்ள மூளை யெலும்பு. நல்லி- இ. நல்லீ.

நல் - நால் - நாலி - நாலிகை = உட்டுளையுள்ள மூங்கில்.

நுல் - நுள்- நுளை - நுளையன் = 1. நீருட் புகுந்து அல்லது முழுகி மீன் பிடிப்பவன். 2. நெய்தல்நிலத்தான் (திவா.). ஒ.நோ: ம. முக்குவன் = மீன் பிடிப்பவன், நெய்தல்நிலத்தான். நுளை = நுளையர் குலம்.

நுள் - நள் = 1. உள். 2. நடு.க.நள்.

நள்ளிடை = நடுவிடம். நள்ளிரவு = நடு இரவு.

நோ: அகடு = உள், நடு.