பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

திருக்குறள்

தமிழ் மரபுரை



இந் நான்கு செயலையும் உடையவன்; வேந்தர்க்கு ஒளிஆம் - அரசரெல்லார்க்கும் விளக்காம்.

அன்பாயிருத்தல் அகமுக மலர்ந்து இனிய கூறல். 'செங்கோல்' உவமையாகுபெயர். குடியென்று விதந்து கூறியது பஞ்சம், வெள்ளம், கொள்ளை, கொள்ளைநோய் முதலியவற்றால் தளர்ந்த குடிகளை. அவர்களைப் பேணுதலாவது வரிநீக்கலும் வேண்டிய பொருளுதவலும். ஒளிபோல் வழிகாட்டுதலின் ஒளி யென்றார். 'ஒளி' ஆகுபெயர். மேல் ‘ஈகை' என்றது ஆட்சியும் போர் வினையும் பற்றியதென்றும், இங்குக் 'கொடை' என்றது அறமுங் கலை வளர்ச்சியும் பற்றியதென்றும், வேறுபாடறிக.

அதி. 40 - கல்வி

அஃதாவது, அரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல். அவை இலக்கணநூல், கணிதநூல், வனப்பியல், வரலாறு, அறநூல், அரசியல்நூல், போர்நூல் முதலியன. இவற்றுள்,அரசியல் நூலும் போர்நூலுந் தவிர ஏனையவெல்லாம் எல்லார்க்கும் பொதுவாம். அரசியல் நூல் அமைச்சர்க்கும் போர்நூல் படைமறவர்க்கும் அரசர்க்குப் போன்றே சிறப்பாக வுரியனவாம்.

திருவள்ளுவர் வேத்தியலை அடிப்படையாக வைத்தே. பொதுவியற்கும் பொருந்துமாறு பொருளீட்டு முறையைக் கூறுவதால், இங்குக் கல்வி யென்றது எல்லார்க்கும் பொதுவாம். எல்லார்க்கும் உரிய பொதுக் கல்வியும் சில தொழில்கட்குரிய சிறப்புக்கல்வியும் கற்ற பின்பே நாகரிக மக்கள் பொருளீட்டுதலை மேற்கொள்ள வேண்டுமென்பது கருத்து. பொருளீட்டுத லாவது தத்தம் தொழிலைச் செய்தல். முந்தின அதிகாரத்தில் “தூங்காமை கல்வி” என்னுங் குறளிலுள்ள 'கல்வி' என்னுஞ் சொல்லால், இவ் வதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக.

(இ-ரை.) கற்பவை கசடு அறக் கற்க – ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் பிழையறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க அங்ஙனம் கற்றபின் அதற்கேற்ப ஒழுகுதலைக் கடைப்பிடிக்க.

'கற்பவை' என்றது பொதுக் கல்வியையும் தொழில்தொறும் வேறுபட்ட சிறப்புக் கல்வியையும் குறிக்கும். கசடறக் கற்றலாவது ஐயந்திரிபறத் தெளிவாயறிதல். நிற்றலாவது, பொதுக்கல்விக் கேற்ப அறநெறியி லொழுகுதலும் சிறப்புக்