66
முல்" (பொருந்தற் கருத்துவேர்)
31
'எண்டோ ளீசற் கெழின்மாட மெழுபது செய்து" (திவ். பெரியதி. 5 : 6 : 8).
3.மேனிலை.
ம. மாடம், க. மாட, தெ. மாடுகு(g).
மாடம்-மாடி = மேனிலையுள்ள வீடு. ஏழடுக்கு மாடி (உ.வ.).
மாள்-மாழை = 1. திரட்சி (பிங்.). 2. கனியக்கட்டி. “கனக மாழையால்'
(சீவக. 913). 3. மாதர் கூட்டம். (அக. நி.).
=
"
மல்-மன். மன்னுதல் (செ.கு.வி.) 1. பொருந்துதல். "மன்னா சொகினம்" (பு.வெ. 10 : 11). 2. மிகுதல். "மன்னிய வேதந் தரும்" (ஆசாரக். 96). 3. தங்குதல். "உத்தரை வயிற்றின் மன்னிய குழவி" (பாகவத. 1, பரிட்சத்து வின்றோ. 1). 4. நிலைபெறுதல். "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை” (குறள். 556). 5. உறுதியாய் நிற்றல் (W.).
(செ. குன்றா வி.) அடுத்தல் (பிங்.).
ஒ.நோ: L. manere, stay. L. remanere, E. remain.
மன் (இடை.) = 1. மிகுதிக்குறிப்பு. "சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே” (புறம். 75). 2. பெரும்பான்மைக் குறிப்பு. “கசதப மிகும்வித வாதன மன்னே” (நன். 165). 3. நிலைபேற்றுக் குறிப்பு. “மன்னே..நிலைபே றாகும்" (நன். 432).
ஒ.நோ: OE. manig, OS., OHG. manag, Goth. manags, E. many. g = y.
மன்-மன்று = 1. அவை, அம்பலம். 2. தில்லைப் பொன்னம்பலம். "தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி" (திருவாச. 4 : 92). 3. அறங் கூறவை. “நெடுமன்றில் வளனுண்டு" (கம்பரா. மூலபல. 145). 4. ஆன்கணம். "மன்றாடி சொல்ல" (திருவாலவா. 52 : 5, அடிக்குறிப்பு). 5. ஆன்தொழு. "ஆன்கணம்...மன்றுநிறை புகுதர" (குறிஞ்சிப். 218). 6. மரத்தடித் திண்ணைப் பொதுவிடம். “மன்றும் பொதியிலும்" (தஞ்சைவா. 34). 7. மக்கள் கூடும் நாற்சந்தி. “மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை" (ஈடு, 3:6:3). 8. மணம். “மன்றலர் செழுந்துளவு” (கம்பரா. திருவவ.
24).
"
"பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்" என்பதற்கேற்ப. ஒன்றன் மணம் அதனொடு சேர்ந்த இன்னொன்றிற் கலத்தலால், மணம் மன்றெனப்பட்டது.
மன்றுபடுதல்
=
அம்பலத்திற்கு வருதல், வெளிப்படுதல். "காம
மறையிறந்து மன்று படும்” (குறள். 1138).
மன்று-மன்றம் = 1. அவையம் (பிங்.). 2. அறங்கூறவையம். "அறனவின் மன்றத் துள்ளோர்" (திருவிளை. மாமனாக. 35). 3. பொன்னம்பல முள்ள தில்லை (பிங்.). 4. மரத்தடிப் பொதுவிடம். "மன்றமும் பொதியிலும்” (திருமுருகு.226). 5. குதிரைகளைப் பயிற்றும் செண்டுவெளி. “பேரிசை மூதூர்