சொற்குடும்பமும் குலமும்
107
- திகிரி = சக்கரம் (இலக்கணப்போலி). திர்- (திரு) - திரும் – திரும்பு. திரும்புதல் = வளைதல். திருமுதல் = வளைதல்.
திரும் - தெரும். தெரும் + வரல் = தெருமரல்.
"அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி"
என்பது தொல்காப்பியம்.
(உரியியல்,13)
திரு- திருகு. திருகுதல் = முறுக்குதல். திருகு- திருக்கு = முறுக்கு, வஞ்சனை.
4.உல் - நுல்
நுல் - நுள்- நுடம் = வளைவு, வளைந்த கால். நுல் - நுறு - நெறி. நெறித்தல் = வளைதல், வளைத்தல்.
5. உல்-புல்
புல் - புர்- புரள்- புரளி. புரள்- புரட்டு- புரட்டல். புரள்- பிறழ். புரண்டை- பிரண்டை- திருகியிருக்கும் கொடிவகை.
புர் - புரி. புரிதல் = வளைதல். புரி - புரிசை = வளைந்த மதில். புரி = மதில் சூழ்ந்த நகர், முறுக்குகுண்ட கயிறு அல்லது நூல். புர்- புரு- புருவம் = வளைந்த கண்பட்டை.
புரி - பரி - பரிசு - பரிசல் = வட்டமான மிதவைக் கூடை. பரி - - பரிதி- பருதி = வட்டமான கதிரவன். பரி- வரி = வளைந்த கோடு, கோடு. வரிதல் = வளைத்துக் கட்டுதல்.
=
புல் - புள் - பள்- பண் - பண்டி - வண்டி = வளைந்த சக்கரம், சக்கரத்தையுடைய சகடம். கபிலையேற்றச் சக்கரத்தைக் கமலை வண்டி என்று உழவர் கூறுதல் காண்க.
பண்டி- பாண்டி- பாண்டில்.
பாண்
டி = வட்டமான ஓடு, அதைக் கொண்டு விளையாடும் விளையாட்டு. பாண்டில் = வட்டமான கிண்ணம், அகல், தாமரை, உருண்டு திரண்ட எருது.
6. புள் - பள் - வள்
வள்- வள்ளம் = வட்டமான கலம், மரக்கால். வள்- வள்ளி வளைந்த கொடி. வள்- வளார்- விளார்- மிலாறு = வளைந்த குச்சு அல்லது பிரம்பு. வள் - வளி = வளைந்தடிக்கும் காற்று.
=