உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரலாற்றுச் சொற்கள்

17

சோலையாய்த் தோன்றிற்று. பெருநிலப் பகுதிகளும் சிறுநிலப் பகுதிகளும் தனித்தனி பெருஞ்சோலையும் சிறு சோலையுமாக விருந்தன. இதனால், மண்ணுலகமும் அதன் கண்டங்களும் நாடுகளும் பொழில் என்னும் பொதுப்பெயர் பெற்றன. பொழில் என்பது சோலை; பொழிதல் திரளுதல்; பொழித்தல் திரட்டுதல். மரங்களின் பொழிப்பு அல்லது தொகுப்புப் பொழில். ஒரு பாட்டின் சொற்பொருளைத் தொகுத்துக் கூறும் உரையைப் பொழிப்புரை யென்றல் காண்க.

"தொழில்காவல் மலிந்தியலும்

பொழில்காவலன் புகழ்விளம்பின்று’’

2

(6:6)

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவில் ‘பொழில்' என்பது ஞாலத்தை (பூமியை)க் குறித்தது.

“ஏழுடையான் பொழில்” என்னும் திருக்கோவைத் தொடரில் (7) ‘பொழில்' என்பது ஞாலம் போன்ற உலகத்தைக் குறித்தது.

நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குற”

(22:26)

என்னும் மணிமேகலை யடியில் ‘பொழில்' என்பது (இந்து) தேயத்தைக் குறித்தது.

(செய்யுளியல்,79)

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்” என்னும் தொல்காப்பிய அடியில் அச் சொல் (தமிழ்) நாட்டைக் குறித்தது.

பரதகண்டமெனப்படும் இந்து தேயம், பழங்காலத்தில் நாவல் மரத்தாற் சிறப்புற்றிருந்தமையால், நாவலம் பொழில் எனப்பட்டது. ஒரு காலத்தில் குமரிமலை முதல் பனிமலை (இமயம்) வரையும் முத்தமிழ் வேந்தர் ஆட்சி செலுத்தியமையால், நாவலந் தண்பொழிற்கு மூவர் தண்பொழில் என்றும் பெயர். பிற்காலத்தில் தமிழ் வழக்கும் தமிழாட்சியும் தெற்கே ஒடுங்கிவர, 'மூவர் தண்பொழில்' என்பது தென்னாட்டை அல்லது தமிழ்நாட்டை மட்டும் குறித்தது.

நிலமெங்கும் ஒரே சோலையாயிருந்த காலத்தில், இடை யிடையோடும் ஆறுகளே, ஊடுநீந்தியும் ஓரமாக நடந்தும் செல்லும் வழிகளாயிருந்தமையின், வழி ஆறு எனப்பட்டது.

2. தோப்பு, தோட்டம் என்னும் ஒத்த பொருட் சொற்களும் இக்காரணம் பற்றியவையே. தொகுப்பு - தோப்பு, தோடு - தோட்டம். தோடு - திரட்சி.