சொற்றொடரியல்
II) நெடுந்தொடரெழுவாய்
87
எ - டு : செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு புலவர், வடசொல் வழங்குவதற்கொரு காரணம் வேண்டும்.
12) மயங்கற்கிடமான எழுவாய்
எ - டு : குக், கௌடோ செலவிற் கல்வி கற்றார்.
13) இடைப்பிறவைப்பு (இங்கு முன்னும் பின்னும் குறி
வரும்)
எ டு : அரசன், எப்படியிருந்தபோதிலும், மாந்தன்தானே.
14) மறுத்துக்கூறும் சொற்றொடர்ப் பகுதி
எ - டு : அது அறியாமையன்று, கவலையின்மையே.
15) சொற்றொடருறுப்பாய் வரும் மேற்கோள்
எ - டு : “அன்பே சிவம், ” என்றார் திருமூலர்.
ii. அரைப்புள்ளி (Semicolon) வருமிடங்கள்
1) ஒரே யெழுவாயின் பல வினைக்குறை வாக்கியங்கள்
எ-டு : சூழ்ச்சியம் (இயந்திரம்) உழவுத்தொழில் செய்கிறது; மாவரைக்கிறது; இடம் பெயர்விக்கிறது; போர் செய்கிறது; இன்னும் எத்துணையோ வினைகளைச் செய்கிறது.
2) ஒப்புநோக்காய் வரும் கூட்டுவாக்கியம்
எ
எ - டு : அறிவுடையோர் அமைந்திருப்பர்; அறிவிலிகள் ஆரவாரிப்பர்.
iii. முக்காற்புள்ளி (Colon) வருமிடங்கள்
1) தலைப்பு
எ-டு : சார்பெழுத்து:
2) அதிகார எண்
எ-டு : மத்தேயு 8: 6.
3) தன் முகவரியில் நகர்ப்பெயர்
எ - டு : எடின்பரோ : 339, ஐரோடு (பெருஞ்சாலை)