88
கட்டுரை வரைவியல்
4) ஒப்புநோக்காய் வரும் பெருங்கூட்டுச் சொற்றொடர்
எ-டு:
டு : கல்வி வெள்ளத்தாலழியாது; நெருப்பால் வேகாது; திருடரால் திருடப்படாது; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும்: செல்வமோ வெள்ளத்தாலழியும்; நெருப்பால் வேகும்; திருடரால் திருடப்படும்; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்.
iv. முற்றுப்புள்ளி (Full Stop) வருமிடங்களாவன
1) சொற்றொடர் முடிவு
2) முகவரி முடிவு
3) சொற்றொட ருறுப்பாய் வராத மேற்கோண் முடிவு
4) தலைப்பு முடிவு
5) சொற்குறுக்கம் (Appreviation)
எ - டு : கி.மு., வே.பா. கமலநாதன்.
6) பிரிவும் மணியும் குறிக்கும் எண்.
எ-டு :1.2.30 (2/2) மணி
7) கையெழுத்து
எ-டு : T.G. நாகலிங்கம் பிள்ளை.
8) தனித்து நிற்குஞ் சொல்.
V. வினாக்குறி (Note of Interrogation)
ஒரு வினாச் சொற்றொடர் முற்றுச் சொற்றொடராயும் நேர்க்கூற்றுச் (Direct Narration) சொற்றொடராயுமிருப்பின், இறுதியில் வினாக்குறிபெறும்; நேரல் கூற்றுச் (Indirect Narration) சொற்றொட ராயும் புணர்ச்சி பெற்றதாயுமிருப்பின் வினாக்குறி பெறாது.
எ - டு : 1) அது என்ன?, “நீ வருகிறாயா?” என்று கேட்டான்.
2) நான் போவேனாவென்று கேட்டான்,
நீ வருகிறாயாவென்று கேட்டான்.
vi. வியப்புக்குறி (Note of Exclamation)
வியப்புச் சொற்றொடரும் வினாச் சொற்றொடர் போன்று, தற்கூற்றுச் சொற்றொடராயிருப்பின் வியப்புக் குறிபெறும்;