உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

கட்டுரை வரைவியல்

4) ஒப்புநோக்காய் வரும் பெருங்கூட்டுச் சொற்றொடர்

எ-டு:

டு : கல்வி வெள்ளத்தாலழியாது; நெருப்பால் வேகாது; திருடரால் திருடப்படாது; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும்: செல்வமோ வெள்ளத்தாலழியும்; நெருப்பால் வேகும்; திருடரால் திருடப்படும்; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்.

iv. முற்றுப்புள்ளி (Full Stop) வருமிடங்களாவன

1) சொற்றொடர் முடிவு

2) முகவரி முடிவு

3) சொற்றொட ருறுப்பாய் வராத மேற்கோண் முடிவு

4) தலைப்பு முடிவு

5) சொற்குறுக்கம் (Appreviation)

எ - டு : கி.மு., வே.பா. கமலநாதன்.

6) பிரிவும் மணியும் குறிக்கும் எண்.

எ-டு :1.2.30 (2/2) மணி

7) கையெழுத்து

எ-டு : T.G. நாகலிங்கம் பிள்ளை.

8) தனித்து நிற்குஞ் சொல்.

V. வினாக்குறி (Note of Interrogation)

ஒரு வினாச் சொற்றொடர் முற்றுச் சொற்றொடராயும் நேர்க்கூற்றுச் (Direct Narration) சொற்றொடராயுமிருப்பின், இறுதியில் வினாக்குறிபெறும்; நேரல் கூற்றுச் (Indirect Narration) சொற்றொட ராயும் புணர்ச்சி பெற்றதாயுமிருப்பின் வினாக்குறி பெறாது.

எ - டு : 1) அது என்ன?, “நீ வருகிறாயா?” என்று கேட்டான்.

2) நான் போவேனாவென்று கேட்டான்,

நீ வருகிறாயாவென்று கேட்டான்.

vi. வியப்புக்குறி (Note of Exclamation)

வியப்புச் சொற்றொடரும் வினாச் சொற்றொடர் போன்று, தற்கூற்றுச் சொற்றொடராயிருப்பின் வியப்புக் குறிபெறும்;