சொற்றொடரியல்
புணர்ச்சிபெறின்
விளிக்குறியும்).
89
வியப்புக்குறி
பெறாது.
(வியப்புக்குறியே
டு : என்னே இதன் பெருமை!
“என்னே இதன் பெருமை! என்றான்.
என்னே! இதன் பெருமை யென்றான்.
vii. மேற்கோட்குறி (Quotation Marks or Inverted Commas)
படும்.
மேற்கோட்குறி, ஒற்றைக்குறி இரட்டைக்குறி என இருவகைப்
இரட்டைக்குறி வருமிடமாவன :
1) நேர்க்கூற்று
எ - டு : “நான் வருகிறேன், ” என்றான்.
2) மேற்கோள்
எ - டு : “ஒழுக்கமுடைமை குடிமை,” என்றார் திருவள்ளுவர். ஒற்றைக்குறி வருமிடமாவன :
1) தற்சுட்டு (ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொட ரேனும் தன்னையே குறித்தல்)
எ - டு : 'ஏ', 'பேடு'
2) வாய்பாடு
எ-டு : 'செய்யும்’, ‘தான’
3) சிறப்புக் குறியீடு
எ - டு : ‘வடக்கிருத்தல்'
4) மேற்கோட்குள் மேற்கோள்
எ-டு : இயேசு மக்களை நோக்கி, “ஆயக்காரன் கோயிற்கு வெளியே நின்று, 'தேவனே! தீயோனாகிய என்மீது இரக்கமாயிரும்' என்றான்” என்றார்.
5) பழமொழி
எ-டு : 'நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத்தீரும்.'
குறிப்பு : மேற்கோட் குறியிருக்குமிடத்திற் புணர்ச்சியிராது.