106
கட்டுரை வரைவியல்
எ-டு : சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு சொல்லும் தேன் சொட்டும். திருவாசகத்திற் குருகார் ஒரு வாசகத்திற்கு முருகார்.' 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்'.
11) பிறிதுமொழிதல்
பிறிதுமொழிதலாவது உவம (உவமான)த்தை மட்டும் கூறி, உவமிய (உபமேய)த்தை அறிந்துகொள்ள வைப்பது.)
எ - டு : ‘குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் நிலைநிற்கும்’
12) தற்குறிப்பேற்றம்
தற்குறிப்பேற்றமாவது இயற்கையாய் நிகழும் நிகழ்ச்சிக்கு ஒருவன்
வேறொரு காரணங் கற்பித்துக் கூறல்.
எ - டு : வண்டு பாட, மலர் தேனளித்தது.
எ-டு
13) ஒழித்துக்காட்டணி
ஒழித்துக்காட்டணியாவது, ஒரு பொருளைப் புகழும் போது, தீமைக்கும் நன்மைக்கும் பொதுவான குணத்தை நன்மைக்கே யுரியதாகக் கூறுவது.
எ-டு: நிடத நாட்டில் வில்லே கோணியிருக்கும்.
14) வேற்றுப்பொருள் வைப்பணி
ஒரு செய்தியை அல்லது நிகழ்ச்சியைக் கூறி, அதன் இறுதியில், அதிலிருந்து படித்துக் கொள்ளும் படிப்பினையாகிய உண்மையை அல்லது நீதியைக் கூறுவது வேற்றுப் பொருள் வைப்பாம்.
எ-டு : பண்டிதர் (Dr.) அரங்காச்சாரியாரால் அறுப்பு மருத்துவம் செய்யப்பெற்றவரும் இறந்துபோவ துண்டு. விதியை யார் வெல்ல முடியும்?
15) முரண் அணி
பொருள்களை முரண் (மாறுபாடு) படக் கூறுவது முரண் அணியாம். அது நான்கு வகைப்படும்.
i. எதிர்நிலை முரண் (Oxymoron)
எ-டு: மெய்யான பொய், இது அதினும் சிறிது பெரிது, கற்றமூடன், ஆண்மையுள்ள பெண், வெளிப்படைக்களவு.