எழுத்தியல்
1) ண், ம், ல், ள், ன் என்ற மெய்கள்
29
ண், ம், ல், ள், ன் என்ற மெய்கள் வல்லினத்தோடு புணரின், இரு வழியிலும் பெரும்பாலும் பின்வருமாறு திரியும்.
எண் எழுத்து
எடுத்துக்காட்டு
திரிபு
1
ண்
ட்
மண் + கலம் = மட்கலம்.
2
ம்
ங்
மரம் + குறிது = மரங்குறிது.
ஞ்
3
4
ள்
7. 8. G.
ந்
ற்
ட்
5
ன்
ற்
மரம் + சிறிது = மரஞ்சிறிது.
மரம் + தழைக்கும் = மரந்தழைக்கும்.
கல் + பலகை = கற்பலகை.
கள் + குடம் = கட்குடம்.
பொன் + பணி = பொற்பணி.
ண், ள் என்னும் மெய்கள் தகரத்தொடு புணர்ந்து டகரமாகும்போது, அத் தகரமும் டகரமாகும்.
எ - டு : மண் + தாழி = மட்டாழி, மண்டாழி.
முள் + தாழை = முட்டாழை.
மட்தாழி, முட்தாழை என்று எழுதுவது தவறு.
விற்போர் (வில் + போர்) என்பதை வில்போர் என்றெழுதுவது பெரும்பிழையன்று; ஆனால், வில்ப்போர் என்றெழுதுவது பெரும் பிழையாம்.
ல், ன் என்னும் மெய்கள் தகரத்தோடு புணர்ந்து றகரமாகும் போது அத் தகரமும் றகரமாகும்.
=
எ - டு : கல் + தாழை = கற்றாழை.
பொன் + தோடு = பொற்றோடு.
கற்தாழை, பொற்தோடு என்றெழுதுவது தவறு.
நகரம் ண், ள் என்ற மெய்களுக்குப் பின்வரின் ணகரமாகவும், ன், ல் என்ற மெய்களுக்குப் பின்வரின் னகரமாகவும் இரு வழியிலும் திரியும்.
ளகரத்தோடு புணர்ந்து நகரம் னகரமாகும்போது, அவ்லகரமும்
னகரமாகும்.
எ - டு : கண் + நீர் = கண்ணீர் - ண் + ந = ண்ண
கள் + நீர் = கண்ணீர் - ள் + ந = ண்ண
பொன் + நகை = பொன்னகைன் + ந = ன்ன
கல் + நகை = கன்னகை - ல் + ந = ன்ன