எழுத்தியல்
33
குறிப்பு : இங்குக் கூறப்பட்டுள்ள வண்ண வாய்பாடுகளைத் திருப்புகழ் வாயிலாய் ஆசிரியர் மாணவர்க்குத் தெளிவாக்குக.
6) அ, இ, உ, எ; அந்த, இந்த, உந்த, எந்த; அப்படி, இப்படி, உப்படி, எப்படி என்னும் சுட்டுவினாச் சொற்கட்குப் பின்.
எ - டு : அப்பையன், அந்தப் பையன், அப்படிச் சொன்னான்.
அங்கு, இங்கு, உங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு; ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் சுட்டு வினாச் சொற்கட்குப் பின்னும் வலிமிகும்.
எ - டு : அங்குச் சென்றான், ஈண்டுத் தந்தான், யாண்டுப் பெற்றான். அங்கு, அப்படி, ஆங்கு, ஆண்டு முதலியவை இறுதியில் ஏகாரம் பெறின் என்றும் இயல்பாம்.
எ
-
டு : அங்கே, அப்படியே, ஆங்கே, ஆண்டே -போனான்.
படி என்னுஞ் சொல் சுட்டுவினாவெழுத்துகளையடுத்து வராது பெயரெச்சங்களை யடுத்துவரின் இயல்பாம்.
எ - டு : சொன்னபடி செய், சொல்லுகிறபடி செய், சொல்லும்படி செய்.
7) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்கட்கும், ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்கும் பின்.
எ
-
டு: உண்ணாக்குதிரை - ஈ. எ. பெ. எ.
படியாச் சென்றான் - ஈ. எ. வி. எ.
பெய்யாக் கொடுக்கும் - செ. வ. வி. எ.
8) மகரஈறு கெட்டுக் குறிப்புப் பெயரெச்சமாய், நிற்கும் பண்புப் பெயர்கட்குப்பின் (பண்புத்தொகை).
எ - டு : மரப்பலகை, வட்டக்கல்.
9) ட, ற இரட்டித்த நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கட்குப் பின்னும், வன்றொடர் மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியா யமைந்த தொகைச் சொற்களிலும்.
எ-டு : ஆட்டுக்கால், முரட்டுப்பயல், கிணற்றுத்தவளை, ஆற்றுப்பாய்ச்சல், நூற்றுக்கணக்கு.
கேடுகாலம், பேறுகாலம், வீடுபேறு, நாடுகிழவோன் முதலிய தொடர்களில் ட, ற இரட்டாமையின் வலி மிகவில்லை.
வன்றொடர் : எ டு : பட்டுத்துணி, கொக்குக்கால்,
பாட்டுக்கூட்டம், கிழக்குத்திசை