எழுத்தியல்
35
3) இனின்று, இலிருந்து என்னும் 5ஆம் வேற்றுமை உருபுகட் குப்பின்.
எ - டு : மரத்தினின்று குதித்தான், வீட்டிலிருந்து புறப்பட்டான்.
4) அகரவீற்றுப் பல்வகைப் பெயரெச்சங்கட்குப் பின்.
எ - டு : வந்த பையன், வருகிற திங்கள், பெரிய பட்டினம், பறவாத கொக்கு, அல்லாத காலம், இல்லாத பொருள்.
5) வினைத்தொகையில்.
எ-டு: சுடுசோறு, விடிகாலை.
6) உகர ஈற்றுத் தனன, தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப்பின்.
எ-டு: பொருது பெற்றான் - 'தனன' வாய்பாடு
என்று சொன்னான் - 'தந்த' வாய்பாடு
நீண்டு சென்றது - 'தாந்த' வாய்பாடு
ஒளிந்து கொண்டான், விரைந்து பேசினான் - 'தனந்த வாய்பாடு.
7) தனிக்குறிலை யடுத்த யகர மெய்யாயிருக்கும் வினைகளின் இறந்தகால எச்சத்திற்குப்பின்.
எ - டு : செய்துகொள், கொய்து தின்.
8) துவ்வீற்றுக் குறிப்பு வினையெச்சத்திற்கும் எதிர்மறை வினையெச்சத்திற்கும் பின்.
எ - டு : நெடிது பேசினான் - கு.வி.எ.
செய்யாது போனான், இல்லாது போயிற்று - எ.ம.வி.எ.
9) துவ்வீற்றுச் சுட்டுவினாப் பெயர்கள் பெயரெச்சமாய் நிற்கும்போது.
எ - டு : அது போழ்து? எது போழ்து?
10) ஏவலல்லாத வினைமுற்றுத் தொடரில்.
எ-டு : வந்தன குதிரை, வந்தன மாடுகள்.
II) ஆ, ஏ, ஓ என்னும் இடைச்சொற்கட்குப் பின்.
எ-டு : நம்பியா பெரியன்? செய்யவே
கொண்டான்.
செய்வான். எவனோ