உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

i. சொன்முறை (Order or Words)

கட்டுரை வரைவியல்

ஒரு சொற்றொடரில் எழுவாய் முன்னும் பயனிலை பின்னும் செயப்படுபொருள் இடையிலு மிருத்தலே, இயல்பான முறை யாகும்.

எ - டு : சம்பந்தர் சமணரை வென்றார்.

எழுவா யில்லாது ஒரு சொற்றொடரும் எழுதுதல் கூடாது. நேர்க்கூற்றில் (Direct Speech) மட்டும் தன்மை முன்னிலை எழுவாய்கள் தொக்கு நிற்கலாம்.

ஏற்றத்தாழ்வான பல பொருள்களைக் கூறும்போது, ஏறுவரிசை (Ascending order of magnitude) யிலாவது, இறங்குவரிசை (Descending order of magnitude) யிலாவது கூறவேண்டும்.

நிரனிறை

இரு அல்லது பல பொருள்களை ஒரு முறையில் நிறுத்தியபின், அவற்றுக்குரிய செய்திகளையும் அம் முறையிலேயே கூறவேண்டும்.

எ - டு : நாய்க்கரும் கவுண்டரும் முறையே ஈரோட்டிற்கும் சேலத்திற்கும் சென்றனர்.

ii. முறைமாற்று (Hyperbat on or Inverted Order)

சில சொற்றொடர்களில் வற்புறுத்தம் (Emphasis) காரணமாய்ச் சொற்றொடருறுப்புகள் முறை மாறி வரும்.

எ-டு

எ - டு : கண்டேன் சீதையை. உண்டே மறுமை.

iii. சொல்லிடையீடு (Inter-verbal Space)

சொற்கட்கிடையில் போதுமான இடம் விடல் வேண்டும். இல்லாவிடின், உரைஞன் அல்லது எழுத்தாளன் கருதிய தொடர்கள் வேறு தாடர்களாக மாறிவிடலாம்.

-

மா சம்பத்து,

எ டு: அரிசி வசம்பு - அரி சிவசம்பு, மாசம் பத்து தலைவி திவசம் - தலைவிதி வசம், ஒரு வயதுப் பிள்ளை ஒருவயதுப் பிள்ளை.

ஒரே சொல்லைப் பிரித்தெழுதுதலும் கூடாது; அதுவும் பொருள் வேறுபடுத்தலாம்.

எ - டு : பரிவால் (அன்பால்) - பரி வால் (குதிரை வால்).