78
கட்டுரை வரைவியல்
ஒரு சொற்றொடரில், உம்மை யேற்று ஒரு முடிபு கொள்ளும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எல்லாம் ஒரு வடிவினவா யிருத்தல் வேண்டும். (இங்கு ஒருபோகமைப்பை நினைக்க).
எ-டு : பாண்டித்துரைத்தேவர் ஓர் அரசரும் புலவரும் வள்ளலுமா
யிருந்தார்.
ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராயும் அமைச்சராயும் புலவராயு மிருந்தார்.
ஆசிரியராயும் அமைச்சருமாய் என்பது தவறு.
៖
ஆவதும்மை : சிலவிடத்து உம்மைச் சொல் ஆவது (either... or) என்னும் பொருள்பட வருவதுண்டு.
எ - டு : ஆமை நிலத்திலும் நீரிலும் வாழும்.
முற்றும்மை : ஒரு வகுப்புப் பொருள்கள் எல்லாவற்றையும் வினையுடன் கூறும்போது, உம்மை கொடுத்துக் கூறவேண்டும்.
எ - டு : இருகண்ணுஞ் சிவந்தன. மூவுலகுந் தொழும் முனிவன்.
முற்றும்மைத் தொடரின்பின், அத் தொடர் குறிக்கும் வகுப்பின் ஒரு குறிக்கும் தொடர்ச்சொல் ‘உம்மை’
பகுதியை பெறாது.
விதந்து
எ-டு : தமிழ் மாணவரெல்லாம், சிறப்பாய்த் தனித்தமிழ் உரைநடை பயில்வார், ஆசிரியர் மறைமலையடிகள் எழுதிய நூல்களைப் படித்தல் வேண்டும்.
உம்மைத் தொகை : உயர்திணைப் பெயர்த்தொடர்கள் உம்மைத் தொகையாய் வரும்போது, இறுதியிற் பலர்பால் ஈறு பெறும்.
எ - டு : கபிலபரணர், சேரசோழபாண்டியர்.
எ
உயர்திணைப் பெயர்கள் உம்மைத் தொகையாக வழங்கிவரும் இணைமொழிகளாயின், இறுதியிற் பலர்பால் ஈறு பெற்றும் பெறாதும்
வரும்.
எ - டு : தாய்தந்தை, தாய்தந்தையர்.
இங்ஙனமே, அஃறிணைப் பெயர்களும் உம்மைத் தொகை யான இணைமொழிகளாயின், இறுதியிற் பலவின்பால் ஈறு பெற்றும் பெறாதும்
வரும்.
-
டு : இராப்பகல், இராப்பகல்கள்; காய்கறி, காய்கறிகள்.