தொடரியல்
93
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, படர்க்கையில் பலர்பாலொழிந்த நாற்பாற்கும் பொதுவாம்; தன்மையிலும் முன்னிலையிலும் இக்காலத்து வராது.
ஏற்கும்.
அவன், முருகன் அவள், வள்ளி
அது, மாடு
அவை, மாடுகள்
வரும்
குறிப்பு : இவ் வினைமுற்றை உயர்திணையில் ஆள்வது இலக்கிய நடைக்கே
குலப்பெயர் முடிபு
ஒருவனது குலம் ஆண்பால் பலர்பால் பண்புப்பெயர் ஆகிய மூவடிவிற் குறிக்கப் பெறலாம்.
எ-டு : இவன் குலம் வேளாளன், பார்ப்பான்.
இவன் குலம் வேளாளர், பார்ப்பார்.
இவன் குலம் வேளாண், பார்ப்பு.
குறிப்பு : பலர்பாலிற் குறிப்பது அத்துணைச் சிறப்புடைய தன்று.
ஒரு குலத்தார் பெயர்கள், அவற்றின் விகுதிக்கேற்ப உயர்திணை முடிபு கொள்ளும்.
எ-டு: வேளாளன் வந்தான் - ஆண்பால்
வேளாட்டி வந்தாள் - பெண்பால்
வேளாளர் வந்தார் - பலர்பால்
இருதிணை யெழுவாய்களின் கூட்டு முடிபு
உயர்திணை எழுவாயும் அஃறிணை யெழுவாயும் கலந்து ஒரு முடிபு கொள்ளும்போது, பொதுவாய் உயர்திணை வினைகொண்டு முடியும்.
எ-டு : நம்பியும் நாயும் வந்தனர்.
இருதிணை எழுவாய்களும் கலந்துவரும்போது உயர்திணை யெழுவாய் இழிவுபற்றியதாயின், இரண்டும் ஒருங்கே அஃறிணை வினைகொண்டு முடியும்.
எ-டு : பேதையும் நாயும் வந்தன.
குறடும் பேதையும் கொண்டது விடா.