தொடரியல்
109
செயற்கு அல்லது செய்தற்கு என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம், நோக்கம் விளைவு ஆகிய இருபொருள்பற்றி வரும்.
எ-டு: படித்தற்கு வந்தான்
நோக்கம்
பணத்தைப் பறிகொடுத்தற்கு இவ்வழி போகின்றான்
விளைவு
முற்றெச்ச முடிபு
முக்கால வினைமுற்றுகளும் எச்சப் பொருளில் வருங்கால் இறந்தகால வினைமுற்று, (1) உடன்தொடர்ச்சி (2) உடனிகழ்ச்சி என்னும் இரு பொருளும்; நிகழ்கால வினைமுற்று, உடனிகழ்ச்சி என்னும் பொருளும்; எதிர்கால வினைமுற்று, (1)நோக்கம் (2) விளைவு என்னும் இரு பொருளும்; பற்றிவரும்.
இறந்தகால முற்றெச்சம்
எ-டு :
கண்டனன் எடுத்தான் = கண்டவுடன் எடுத்தான் = கண்டு எடுத்தான்
-
உடன் தொடர்ச்சி
பாடினன் வந்தான் = பாடிக்கொண்டு வந்தான் உடனிகழ்ச்சி
நிகழ்கால முற்றெச்சம்
காண்கின்றான் தொழுகின்றான் = கண்டுகொண்டு
தொழுகின்றான்
எதிர்கால முற்றெச்சம்
உடனிகழ்ச்சி
காண்பான் வந்தான் = காண வந்தான் - நோக்கம்
காலொடிவான் விழுந்தான் = காலொடிய விழுந்தான் - விளைவு
பண்டை முறைப்படி ஆண்பாற் படர்க்கை எதிர்கால முற்றெச்சமாகிய செய்வான் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இன்று ஏனை யிடம் பால்களிலும் வழங்கும்.
எ-டு: செய்வான் வந்தேன், வந்தேம்
செய்வான் வந்தாய், வந்தீர்
செய்வான் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன.
செய்வான் என்னும் வினையெச்சம் எல்லா இடம் பால் களிலும் வழங்கினும், இன்றும், அவ்வவ் விடத்திற்கும் பாலிற்கும் உரிய முற்றெச்சங்களை வழங்கத் தடையில்லை.