204
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
(5)
பாரதம் இராமாயணத்திற்குப் பிந்தியது.
பாரதம் இராமாயணத்திற்கு முந்தியதன்று.
பயிற்சி 1
கீழ்வரும் வாக்கியங்களின் பொருளை எதிர்மறை வடிவில் அமைத்துக் காட்டுக :
(1) வியாழன் மிகப் பெரிய கோள்.
(2) தேசியப் போராட்டம் காந்தியடிகளின் முயற்சியால் வலுத்தது.
(3) அவர் என்னைவிடத் தகுதிவாய்ந்தவர்.
(4) என் தந்தையார்க்குக் கண்ணாடியிருந்தால்தான் படிக்க முடியும்.
(5)
கம்பராமாயணத்தில் சில உயர்வுநவிற்சிகள் வரம்பு கடந்தன.
(6) தூங்கினவன் கன்று சேங்கன்று.
(7) தமிழ் மிகப் பழைமையான மொழி என்பது அனை வர்க்கும்
(8)
உடன்பாடு.
ஆசிரியர் சில சமையங்களில் பேசுவதுண்டு.
முட்டாள்தனமாய்ப்
பயிற்சி 2
கீழ்வரும் எதிர்மறை வாக்கியங்களின் பொருளை உடன் பாட்டு வடிவில் அமைத்துக்காட்டுக :
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
பாண்டவரும் கௌரவரும் ஒருபோதும் ஒற்றுமையா யிருந்ததில்லை.
பட்டினத்தாருக்கிருந்த செல்வம் கொஞ்சநஞ்சமன்று. பன்னீர்ச்செல்வம் மறைந்த இடம் இன்னதென்று இன்னும் ஒருவருக்கும் தெரியவில்லை.
வித்தில்லாமல் விளைவுண்டா?
யாரும் பிறந்தவுடன் பேசமுடியாது.
வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்.
வள்ளுவர் வாக்கு வாய்க்காமற் போகாது.
(8) இதை வேறொருவரும் செய்திருக்க முடியாது.