252
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
iv. ஒப்புநோக்காய்வரும் பெருங்கூட்டு வாக்கியம்.
எ-டு : கல்வி வெள்ளத்தாலழியாது; நெருப்பால் வேகாது; திருடரால் திருடப்படாது; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும்; செல்வமோ வெள்ளத்தாலழியும்; நெருப்பால் வேகும்; திருடரால் திருடப்படும்; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்.
4. முற்றுப்புள்ளி (Full Stop or Period) வருமிடங்கள்
1. தலைப்பின் இறுதி.
எ-டு : மரபியல்.
11. வாக்கிய இறுதி.
எ-டு : உருவத்தில் மாந்தரா யிருப்பவரெல்லாம் உண்மையில் மாந்தரல்லர்.
iii. வாக்கிய வுறுப்பாய் வராத மேற்கோள் இறுதி. எ-டு : “அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்."
"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்."
99
-
திருமூலர்.
-திருவள்ளுவர்.
“தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்குவது மட்டுமன்று, தழைத்தோங்கவும் வல்லது.’ - கால்டுவெல். "ஆரியருட் சாதிவகுப்பு இல்லை.”
66
iv. முகவரி யிறுதி.
எ-டு : திருவாளர்
மறைமலையடிகள்.
பிரகாசம் சாமுவேல் அவர்கள், பி.ஏ.,
எல்.டி., ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், வாணக்காரக்
கொல்லை, ஆம்பூர், வடார்க்காட்டு மாவட்டம்.
V. தேதியிறுதி.
எ-டு : 1-8-1950.
vi. சொற்குறுக்கம்.
எ-டு : தொல். சொல். 58.
கி.மு. 500.
வே. பா. கமலநாத முதலியார்.
vii. மணிப்பிரிவு.
எ-டு: 2.30 (2/2)
viii கையெழுத்து.
T.G. நாகலிங்கம் பிள்ளை.