108
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
அறிவுடைநம்பி : ஆம்; காண்கிறேன், ஆனால், அவர்களெல்லாம் திருந்தும்படி, கடவுள் அவர்களைக்கூடக் கொஞ்சக்காலம் விட்டுவைக்கிறார்; திருந்தினவர்களைத் தம்மிடம் முந்திச் சேர்த்துக்கொள்கிறார்.
ஐயம்பெருமாள்: கூடக் கொஞ்சக்காலம் விட்டுவைத்தும் திருந்தாத வர்களைக் கடவுள் என்ன செ-வார்?
அறிவுடைநம்பி: நரகத்தில் போடுவார்.
ஐயம்பெருமாள்: மக்கள் தாம் செ-த குற்றத்திற்குத் தக்கபடி, இவ் வுலகத்திலேயே அரசனால் தண்டிக்கப்படும்போது, அவர்களை ஏன் திரும்பவும் கடவுள் தண்டிக்கிறார்?
அறிவுடைநம்பி: அரசன் மாந்தனே யாதலால், அவனால்
கண்டு
பிடிக்கமுடியாத குற்றங்களுக்கெல்லாம் கடவுள் தண்டிக்கிறார்.
ஐயம்பெருமாள்: நரகம் எங்கே யிருக்கின்றது? நரகத் தண்டனை எப்போது? எப்படிப்பட்டது? எவ்வளவு காலம்? அதன்பின் என்ன நேரும்?
அறிவுடைநம்பி: அவற்றைப்பற்றித் திட்டமா-ச் சொல்ல முடியாது.
ஐயம்பெருமாள்: அப்படியானால் நரகத்தைப்பற்றி உமக்கு எப்படித் தெரியும்?
அறிவுடைநம்பி: பெரியோர்கள் எழுதிவைத்ததுதான்.
ஐயம்பெருமாள்: பெரியோர்கள் எந்தக் காலத்தில் எழுதி வைத்தார் கள்? அறிவில்லாத பழங் காலத்திலல்லவா? வரவர அறிவு வளர்ந்துவருவதை நீர் அறியவில்லையா? அறிவில்லாக் காலத் தில் எழுதிவைத்ததையா அறிவுள்ள காலத்தில் நம்புவது?
அறிவுடைநம்பி: எந்தக் காலத்தில் எழுதிவைத்தா லென்ன? நம்ப வேண்டியதை நம்பித்தானே ஆகவேண்டும்?
ஐயம்பெருமாள்: சரி, அந்தக் குருட்டுநம்பிக்கை யிருக்கட்டும், கடவுள் ஏன் திருந்தினவர்களை முந்திச் சேர்த்துக்கொள்கிறார்?
அறிவுடைநம்பி: வீட்டுலகில், அவர்கள் இவ்வுலகச்
சிற்றின்ப
வாழ்வினுஞ் சிறந்த பேரின்ப வாழ்வு நிலையாக வாழ்வதற்கு?