58
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
எ-டு: திருநெல்வேலி மாவட்டத் தண்டலாளர் (Collector) அவர்கட்கு, பாளையங் கோட்டைத் திரு. யோவான் (St. John's) உயர்நிலைப்பள்ளி 6ஆம் படிவ மாணவன் அருளப்பன் எழுதுவது (முறையிடுவது, விண்ணப்பித்துக் கொள்வது, தெரிவிப்பது):
சென்னை மாகாணக் கல்வியமைச்சராகிய நான் இம் மாகாணத் தமிழாசிரியர்க்கு அறிவிப்பது யாதெனின் (என்னவெனில்):
சோழன் குலோத்துங்கன் விடுக்கும் ஓலை (திருமுகம், ஆணை). செங்கேணி அத்திமல்லன் வீராண்டனான எதிரிலிச்சோழச் சம்பு வராயன் காண்க:
அருமை மகன் சீராளனுக்கு உன் அன்புள்ள அன்னை எழுதுவது:
உறவாடற் கடிதங்களிலும் வணிகக் கடிதங்களிலும் உள்ள கொளு, சுருக்கம்பற்றி, கடிதம் விடுப்போரைக் குறியாது கடிதம் விடுக்கப்பெறு வோரைமட்டும் குறிப்பதுண்டு.
எ-டு: அருமை அத்தான் அவர்கட்கு எழுதுவது:
அருமைத் தம்பி ஆவிடையப்பனுக் கெழுதுவது:
திருவாளர் திருவரங்கம் பிள்ளை அவர்கட்கு:
நண்பருக்கும்
அறிமுகமாகாதவர்க்கும்
எழுதும் உறவாடற்
கடிதங்கள், பெரும்பாலும் கொளுவில்லாமலே அமையும்.
(3) விளி
கொளுவிற்குக் கீழாக, இடப்புறத்தில், தனியா-, கடிதம் விடுக்கப் படுவோரை விளிப்பது விளியாகும்.
உறவினர்க்கெழுதும் கடிதங்களில்
உறவின்முறைப் பெயரே
விளிக்கப்பெறும். அது உயர்வு குறிப்பின் உயர்வுப்பன்மைப் பெயராக வும், உயர்வு குறியாவிடின் ஒருமைப்பெயராகவும், இருக்கும்.
எ-டு: உயர்வு விளி தந்தையீர்,
உயர்வில் விளி
தந்தா-,
அன்னையீர்,
அன்னா-,
மாமனாரே,
மாம்,
தமையனாரே,
தமைய,
தம்பீயீர்,
தம்பீ,
தமக்கையீர்,
தமக்கா-,
தங்கையீர்,
தங்கா-,
'மாமனீர்', 'தமையனீர்' முதலிய வடிவங்கள் இலக்கணத் தோடி
சையுமேனும், வழக்கின்மையின் உரைநடைக்கேலா.