கட்டுரையியல்
67
பதிவுசெ-யப் பெறுங் கடிதங்களாயின், மேற்கூறியவாறு கடிதம் விடுக்கப் படுவோரின் முகவரிமட்டுமன்றி, அதற்குக் கீழாக இடப்புற மூலையில், கடிதம் விடுப்போரின் முகவரியும் குறிக்கப்பெறல் வேண் டும். இது, பதிவு செ-யப்பெறாத கடிதங்கட்கு வேண்டாத தாயினும், அவற்றிலும் அதை எழுதுவது நல்லதே. இதனால், கடித வுறையைத் திறக்குமுன்னரே, அதை விடுத்தோர் யாரென அறிந்து கொள்ளலாம். இதனால் சில நன்மையுண்டு.
எடுத்துக்காட்டுகள்
(பதிவு செ-யப் பெறாதது)
அஞ்சல் தலை
வித்துவான் ஆறுமுக முதலியார் அவர்கள்
எம்.ஏ., பி.ஓ.எல்., எல்.டி.,
தமிழ்ப் பேராசிரியர்,
ஆசிரியர் கல்லூரி,
சைதாப்பேட்டை, சென்னை.
(பதிவு செ-யப் பெறாதது)
அஞ்சல் தலை
திருவாளர் மாணிக்கவேல் செட்டியார் அவர்கள், 12, கந்தப் பொடிக்காரத் தெரு, ஆம்பூர்,
(வடார்க்காட்டு மாவட்டம்)
விடுப்போன்:
பொன்னையா,
6, பாண்டித்துரைத் தெரு,
செவ்வா-ப்பேட்டை, சேலம்