86
இயற்றமிழ் இலக்கணம்
சுட்டெழுத்துகளும், வினாவெழுத்துகளும் இடைச்சொற்களாத லின், அவை புணரும் புணர்ச்சியெல்லாம் அல்வழியே யாகும்.
உ-ம்.
எ + இடம் = எவ்விடம்?
அ + உயிர் = அவ்வுயிர் ) + அணி = இவ்வணி
எ + யானை = எவ்யானை அ + யானை = அவ்யானை இ + யானை = இவ்யானை
உ + யானை = உவ்யானை
எ + குலம் = எக்குலம்? அ + படி = அப்படி இ + மாடு = இம்மாடு
உ + வகை = உவ்வகை
அ + இடை = ஆயிடை.
எகர வினா முன்னும்,முச்சுட்டின் முன்னும் உயிர் வர வகரம் தோன்றிற்று.
எகர வினா முன்னும், முச்சுட்டின் முன்னும் யகரம் வர வகரம் தோன்றிற்று.
எகர வினா முன்னும், முச்சுட்டின் முன்னும் பிற மெ-கள் வந்து மிக்கன. செ-யுளிற் சுட்டு நீண்டு யகரமெ- தோன்றிற்று.
24. எகர வினாமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எ-தின் வவ்வும், பிறவரின் அவையும்; தூக்கிற் சுட்டு நீளின் யகரமும், தோன்றுதல் நெறியே.
ii. சில உயிரீற்று மரப்பெயர் முன் வல்லினம்
(நன். சூ.163)
105. வேற்றுமை வழியில், சில மரப்பெயர்கள் முன் வலிவரின், அதற் கின மெல்லினம் தோன்றும்.
உ-ம்.
மா + கா = மாங்கா-
விளா + பழம் = விளாம்பழம்.
25.
மரப்பெபயர் முன்னர் இனமெல் லெழுத்து வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே.
(நன். சூ.
166)
2. கெடுதல்
அத்துச் சாரியையின் முதல் கெடுதல்:
106. நிலைமொழி யீற்றிலுள்ள அகரவுயிர் முன் அத்துச் சாரியையின் அகரங் கெடும்.
உ-ம்.
மர(ம்) + அத்து = மரத்து. =
பட்டின (ம்) + அத்து = பட்டினத்து.
26. அத்தின் அகரம் அகரமுனை இல்லை.
(நன். சூ.252)