5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
113. யாப்பிலக்கணம்
இருவகைப்படும்.
91
உறுப்பிலக்கணம், செ-யுளிலக்கணம் என
114. உறுப்பிலக்கணமாவது எல்லாச் செ-யுள்கட்கும் பொதுவான உறுப்புகளைப்பற்றிக் கூறும் இலக்கணம்.
115. செ-யுளிலக்கணமாவது அவ் வுறுப்புகளாலான செ-யுள் களைப் பற்றிக் கூறும் இலக்கணம்.
உறுப்பிலக்கணம்
116. செ-யுளுறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறாம்.
117. அவற்றுள் எழுத்து முதலும், சார்புமாக முன்னர்க் கூறப்பட்டவையே.
அசை
எழுத்தினாலாவது அசை.
118. அசையாவது, எழுத்துகளின் ஒலித் தொடர்ச்சி இடையிடை அசைக்கப்பட்டு நிற்பது.
-
அசைத்தல் ஒலியைக் கூறுபடுத்தல்.
அசை உயிரெழுத்தாலும் உயிர்மெ- யெழுத்தாலும் உண்டாகும்.
119. அசை நேரசை, நிரையசை என இருவகைப்படும். நேரசையாவது ஓர் எழுத்து நேரே (அதாவது தானா- ஒலித்தல். நிரையசையாவது ஈரெழுத்து நிரந்து (கலந்து) ஒலித்தல்.
உ-ம். வா - நேரசை. வரி - நிரையசை.
நிரையசை யெழுத்துகள் பிரிந்தொலியா.
120. நேரசை குறில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும் நெடில் தனித்தும், நெடில் ஒற்றடுத்தும் நால்வகையாக வரும்.
ஒற்று மெ
உ-ம்.
க-குறில் தனித்தது. கல்குறில் ஒற்றடுத்தது. கா -நெடில் தனித்தது.
கால் - நெடில் ஒற்றடுத்தது.