94
இயற்றமிழ் இலக்கணம்
இப் பாட்டில் முதலடியில் நான்கு சீரும், இரண்டாமடியில் மூன்று
சீருமாக மொத்தம் ஏழு சீருள. அவை யாவை?
சீர்
அசைவா-பாடு
சீர்வா-பாடு
சீர்ப்பெயர்
அகர
நிரை நேர்
புளிமா
இயற்சீர்
முத ல
நிரை நேர்
புளிமா
இயற்சீர்
எழுத் தெல் லாம்
நிரை நேர் நேர்
புளிமாங்கா-
வெண்சீர்
ஆதி
நேர் நேர்
தேமா
இயற்சீர்
பக வன்
நிரை நேர்
புளிமா
இயற்சீர்
முதற் றே
நிரை நேர்
புளிமா
இயற்சீர்
உலகு
நிரை நேர்
புளிமா
இயற்சீர்
இங்ஙனமே ஏனைச் செ-யுள்களையும் பிரித்துக் கொள்க.
அடி
126. சீரினாலாவது அடி, செ-யுளுக்கு அடி போல்வது அடியெனப் பட்டது. அடி பாதம்.
―
சீர்கள் அடுத்து வருவது அடி யெனினும் பொருந்தும்.
127. அடி: குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.
128. குறளடி: இருசீரடி குறளடி. அது குறளாயிருத்தலாற் குறளெனப் பட்டது. குறள் - குட்டை.
உ-ம்.
கல்லால் நிழல்மலை வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே.
129. சிந்தடி: முச்சீரடி சிந்தடி. அது சிந்தா யிருத்தலாற் சிந்தெனப் பட்டது.
சிந்து - குறளினும் சற்று நெடியது.
உ-ம்.
1
2
3
இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடக் கையினா-