6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)
103
11. தொடர்மொழியாவது பல சொற்கள் தொடர்ந்து நிற்பது. இது சொற்றொடர் என்றும் கூறப்படும்.
உ-ம்.
பனைமரம்.
அறம் செய விரும்பு.
12. பொதுமொழியாவது தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொது வாயிருப்பது. அஃதாவது ஒருகால் ஒருபொருள் தந்து தனிமொழியாயும், மற்றொருகால் பலபொருள் தந்து தொடர்மொழியாயும் இருப்பது.
உ-ம்.
பொதுமொழி
தனிமொழிப்பொருள்
தொடர்மொழிப் பொருள்.
தாமரை
ஒரு மலர்
வேங்கை
ஒரு விலங்கு
தா + மரை = தாவுகின்ற மான். வேம் + கை = வேகின்ற கை.
(1560T..)
6.ஒருமொழி ஒருபொரு ளனவாம்: தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன.
பெயர்ச்சொல்
ஆகுபெயர்
13. ஒரு பொருளின் பெயர் அதற்குச் சம்பந்தமான இன்னொரு பொருளுக்குத் தொன்றுதொட்டு ஆகிவருவது ஆகுபெயர். அது பொரு ளாகுபெயர், இடவாகுபெயர் முதலியனவாகப் பலவகைப்படும்.
1. பொருளாகு பெயர்: பொருளாகு பெயராவது ஒரு பொருளின் அல்லது உடம்பின் பெயர் அதன் உறுப்பிற்கு ஆகிவருவது. இது முதலாகு பெயர் என்றுங் கூறப்படும்.
உ-ம்.
தாமரை முகம் - இதில் தாமரை என்னும் கொடியின் பெயர் அதன் உறுப்பாகிய மலருக்கு ஆகி வந்தது.
2. இடவாகு பெயர்: இடவாகு பெயராவது ஓர் இடத்தின் பெயர் அவ் விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவது.
உ-ம்.
கராச்சி வாங்கினாள் - இதில் கராச்சி என்னும் இடப்பெயர் அவ் விடத்தில் நெ-ய3ப்பட்ட பட்டுச்சேலைக்கு ஆகி வந்தது.
3. காலவாகு பெயர்: காலவாகு பெயராவது ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தில் தோன்றும் பொருளுக்கு அல்லது நிகழும் நிகழ்ச்சிக்கு ஆகிவருவது.
உ-ம்.
கோடை விளைந்தது இதில் கோடை என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகிவந்தது.