6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)
109
முதல் வேற்றுமைக் கருத்தாவிற்கும், மூன்றாம் வேற்றுமைக் கருத்தா விற்கும் வேறுபாடு:
1. முதல் வேற்றுமைக் கருத்தா உருபின்றி எழுவாயா- நிற்கும். மூன் றாம் வேற்றுமைக் கருத்தா வாக்கியத்திற் செயப்படுபொருள் எழுவாயா யிருக்கும்.
2. முதல் வேற்றுமைக் கருத்தா வாக்கியத்தில் கருத்தா எழுவாயா யிருக்கும்; மூன்றாம் வேற்றுமைக் கருத்தா வாக்கியத்திற் செயப்படுபொருள் எழுவாயா யிருக்கும்.
3. முதல் வேற்றுமைக் கருத்தா வாக்கியம் செ-வினை கொண்டு முடியும்; மூன்றாம் வேற்றுமைக் கருத்தா வாக்கியம் செயப்பாட்டுவினை கொண்டு முடியும்.
உ-ம்.
தச்சன் கோயிலைக் கட்டினான் - முதல் வேற்றுமைக் கருத்தா. தச்சனாற் கோயில் கட்டப்பட்டது - மூன்றாம் வேற்றுமைக்
கருத்தா.
மூன்றாம் வேற்றுமை, கருவி வேற்றுமை என்றுங் கூறப்படும்.
10. மூன்றா வதனுருபு ஆல்ஆன் ஓடுஓடு
கருவி கருத்தா உடன்நிகழ் வதன்பொருள்.
(நன்.சூ.297)
19. நான்காம் வேற்றுமை: நான்காம் வேற்றுமை உருபு 'கு'. அதன் பொருள் ஏற்றுக்கோடற்பொருள். அது கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை முதலிய பலவகைப்படும்.
நேர்ச்சி - நட்பு. தகவு - தகுதி. அதுவாதல் - ஒரு பொருள் இன்னொரு பொருளாதல், பொருட்டு -நிமித்தம்.
உ-ம். புலவர்க்குப் பரிசளித்தான் பாம்பிற்குக் கீரி பகை
சுந்தரர்க்கு நண்பர் சேரமான் பெருமான்
மன்னர்க்குத் தகும் மாளிகை
சோற்றுக்கு அரிசி
கூலிக்கு வேலை
சச்சந்தனுக்கு மகன் ஜீவகன்
தஞ்சைக்கு வடக்கு சிதம்பரம்
இல்லதிற்கு உள்ளது மேல்
வில்லுக்குச் சிறந்தவன் விசயன்
T
கொடை
பகை
நேர்ச்சி
தகவு
அதுவாதல் பொருட்டு
முறை எல்லை
ஒப்பு
ஏது