130
36.
நும் தம்
இயற்றமிழ் இலக்கணம்
(நன். சூ.221)
எம்நம் ஈநாம் மவ்வரு ஞநவே.
ii. தனிக்குறி லணைந்த லளமுன் த
56. அல்வழிப் புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்த லகர ளகர மெ- கள் வருமொழி முதலில் தகரம் வரின் முறையே றகர டகரங்களாகத் திரி வதுடன் ஆ-தமாகவும் பெறும்.
உ-ம்.
அல் + திணை = அஃறிணை
முள் + தீது = முஃடீது
ல ள, ஆ-தமாகத் திரிந்தன.
கல் + தீது = கற்றீது
முள் + தீது = முட்டீது
ல ள, றகர டகரங்களாகத் திரிந்தன.
37.
(நன். சூ.)
குறில்வழி லளத்தவ் வணையின் ஆ-தம்
ஆகவும் பெறூஉம் அல்வழி யானே.
4. மிகுதலும் திரிதலும்
குற்றியலுகரப் புணர்ச்சி. குற்றியலுகரத்தின் முன் நாற்கணம்.
i. ஒற்று இரட்டித்தல்
57. நெடிற்றொடர்க் குற்றியலுகரமும், உயிர்த்தொடர்க் குற்றியலுகர மும் ஏறிய டகர றகர மெ-கள் வேற்றுமை வழியிற் பெரும்பாலும் இரட்டும்.
உ-ம்.
காடு + விலங்கு = காட்டு விலங்கு ஆறு = நீர் = ஆற்று நீர்
நெடிற்றொடரில், ட, ற இரட்டித்தன.
முரடு + மனிதன் = முரட்டுமனிதன்
வயிறு = + எரிச்சல் = வயிற்றெரிச்சல்
உயிர்த்தொடரில்
ட, ற இரட்டித்தன.
இனி, 'நாடு கிழவோன்' 'கிணறு வெட்டினான்' என டகர றகர மெ- கள் வேற்றுமை வழியில் இரட்டாமலும், 'காட்டரண்' 'களிற்றியானை' என அல்வழியில் இரட்டித்தும் வருதலும். 'வெருக்குக்கண்' 'எருத்துமாடு' எனப் பிறமெ-கள் இருவழியிலும் இரட்டித்து வருதலும் கொள்க.
38. நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே.
(நன்.சூ.183)