88
பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
கம்மத்தம் - கம்மத்தமு (தெ.) = பண்ணைப் பயிர்த்தொழில்.
கமம் = பயிர்த்தொழில். கமக்காரன் = உழவன்
கமம் - கம் = 1. தொழில்.
"ஈமும் கம்மும் உருமென் கிளவியும்”
2. கம்மியத் தொழில்
(தொல். எழுத்.328)
(நன். 223, விருத்தி)
கம்ஆளன் கம்மாளன். கம்மாளர் என்பார் கொல்லன், தச்சன், கம்மியன் (சிற்பி), தட்டான், கன்னான் என்னும் ஐங்கொல்லர். கம்மியனைக் கல்தச்சன் என்று கூறுவது வழக்கம்.
கம் - கம்மியம் = 1.கைத்தொழில்
2. கம்மாளத் தொழில்.
கம்மாளன் என்னும் சொற் போன்றே, கம்மியன் என்னும் சொல்லும்
பிற கொல்லரையும் குறிக்கும்.
கம்மியன் = 1. கைத்தொழில்
"கம்மியரும் ஊர்வர் களிறு”
(சீவக.495)
2.கம்மாளன் (தி.வா.).
3.பொற்கொல்லன்.
66
'ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த "
கம்மியநூல் = கட்டடநூல் (சிற்ப சாத்திரம்)
=
"கம்மியநூல் தொல்வரம் பெல்லை கண்டு”
(புறம்.353).
(திருவிளை. திருநகரங்.38)
கருமகன் என்பது, "கருங்கைக் கொல்லர்" (சிலப். 5: 29) என்பது போல் இருப்புக் கொல்லனை மட்டும் குறிக்கும். கருமகன் - கருமான்.
ஒ.நோ: பெருமகன் - பெருமான், மருமகன் - மருமான்.
கரு என்னும் வினைமுதனிலை வடமொழியில் க்ரு எனத் திரியும். கரணம் என்பதைக் காரண என நீட்டியும், க்ரு என்னும் முதனிலையினின்று கார்ய என்னும் சொல்லை ஆக்கியும், கருமம் என்பதைக் கர்மன் எனத் திரித்தும், உள்ளனர் வட மொழியாளர்.
65
மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல."