பண்டைத் தமிழ் நாகரிகம்
93
தெய்வத் தேரிற் பல அணியுறுப்புக்களும் தேவர் முனிவர் படிமைகளும் யாளி குதிரை யுருவங்களும் செய்து வைக்கப் பெறுதலால், தேர்த்தச்சர் தச்சுத் கலையில் தலைசிறந்தவராவர்.
கட்டுமரம் முதல் கப்பல்வரை பல்வகைக் கலங்களையும் செய்யும் தச்சர் கலம்புணர் கம்மியர் (கப்பல் தச்சர்) எனப் பட்டார்.
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்"
என்னும் வெட்சித்திணைத் துறைகளும் (தொல். புறத்5), செங்குட்டுவன் பனிமலையிற் கல்லெடுத்துக் கண்ணகிக்குப் படிமஞ் சமைப்பித்ததும், கல்தச்சு வினைக்குச் சான்றுகளாம்.
மண்டபங்களை யெல்லாம் கல்லாற் கட்டுவதே தொன்று தொட்ட வழக்கம். நூற்றுக்கால் மண்டபங்களும் ஆயிரக்கால் மண்டபங்களும் விழாப்படி மண்டபங்களும் அத்தகைய கற்கோயில் கற்றளி யெனப்பட்டது. தளிகோயில். தெய்வப் படிமைகள் (சிலைகள்) ஐவகைக் கொல்லராலும் செய்யப்பட்டன.
4. கொத்தம்
கொத்தம் என்பது கொத்தன் வேலை அல்லது கட்டடத் தொழில். இதைக் கட்டடக் கலை என்னும் தலைப்பிற் காண்க.
5. கல வினை
கல வினை என்றது குயவன் செய்யும் கலத் தொழில்.
கலஞ்சய் கோவே கலஞ்செய் கோவே
இருளதிணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை அகலிரு விசும்பின் ஊன்றும் சூளை
தாழி
.....
அன்னோற் கவிக்கும் கண்ணகன்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே."
என்னும் புறப்பாட்டில் (228) சுள்ளை, திகிரி (சக்கரம்) மண் என்பவையும்,
" உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்."
என்னும் குறளில் (883), மட்பகை யென்னும் வனைகலம் அறுக்குங் கருவியும், சொல்லப் பட்டன.