உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

107

யானை மறவர் என்பவர் எண்பேராயத்தார். இதிற் படைத் தலைவர் என்பார் தேர்ப்படைத் தவைராயிருக்கலாம்.

ஆருயிர் நண்பர், அந்தணர், சமையற்காரர், மருத்துவர், கணியர் என்பவர் உறுதிச் சுற்றத்தார்.

இனி, அறிவாலும் அகவையாலும் மூத்த பெரியோரை அரசர் அறிவுரையாளராக அமர்த்திக் கொள்வதுமுண்டு. அவர் முதுகண் எனப்படுவர்.

ஒவ்வோர் அரசியல் துறையும் திணைக்களம் (Department) எனப்பட்டது. அரசிறைத் திணைக்களத் தலைவன் புரவுவரித் திணைக்கள நாயகம் எனப் பட்டான். நிலவரி, தொழில்வரி, வணிகப் போக்குவரத்து வரி, நல்லா நல்லெருது முதலிய இயங்கு திணைவரி, திருமண வரி (கலியாணக் காணம்) காவல் வரி முதலிய பலவகை வரிகள் குடிகளிடம் வாங்கப்பட்டன. நாடுகூறு என்பவன் நிலத் தீர்வையைத் திட்டஞ் செய்பவன். வரியிலார் என்பவர் வருகின்ற வரித்தெகைகளை வாங்கிப் பதிவு செய்பவர். வரிக் கூறிடுவார் என்பவர் பதிவு செய்த வரித் தொகைகளைப் பங்கிடுபவர் அல்லது பாகுபாடு செய்பவர். வரிப் பொத்தகம் என்பவன் நிலவரிக் கணக்கன். புரவு வரி என்பவன் பிற வரிக் கணக்கன். நிலவரி விளைவில் ஆறிலொரு பங்கு கூலமாகவும், பிற வரிகள் குறிப்பிட்ட பணத் தொகையாகவும், வாங்கப்பட்டன. ஊரவையார் அவற்றை வாங்கித் தலைநகரிலுள்ள பண்டாரத்திற்கும் பொக்கச சாலைக்கும் அனுப்பி வந்தனர். நிலவரியைத் திட்டஞ்செய்ய நிலங்கள் எல்லாம் துல்லியமாய் அளக்கப்பட்டன.

வேந்தன் அதைக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பகலில் முதல் பத்து நாழிகை கொடைக்கும், இடைப்பத்து நாழிகை வழக்குத் தீர்த்து முறை செய்வதற்கும், கடைப் பத்து நாழிகை தன் இல்லற இன்பத்திற்கும் செலவிட்டான். அவன் காலையில் எழுந்தவுடன் பள்ளியெழுச்சி முரசம் அறையப்படும். எட்டர் என்பவர், அவனுக்கு நாழிகையறிவிப்பவர். அகவர் (சூதர்) என்பவர், நின்று கொண்டு அவன் முன்னோர் பெருமையைக் கூறி அவனைப் புகழ்ந்து பாடுபவர். ஓவர் (மாகதர்) என்பவர், இருந்து கொண்டு அங்ஙனம் பாடுபவர். ஏத்தாளர் பிற சமையங்களிற் புகழ்ந்து பாடுபவர்.

வேந்தன் தன் கொலு மண்டபத்திற்குச் செல்லும் போதும், அங்கு அமர்ந்திருக்கும் போதும், அதினின்று ஞ 1. மொழி மீளும் போதும், மெய் காவலர் பக்கத் துணையாவர் பிற நாட்டரசரும் அவர் தூதரும் குறுநில மன்னரும் பதினெண் கணத்தாரும் திணைக்களத் தவைரும் நாட்டுப் பெருமக்களும் கூடிய கொலு மண்டபத்தில், அரசு கட்டில் என்னும் அரியணையில் வேந்தன் வீற்றிருக்கும் கொலு ஒலக்கம் எனப்படும். காலைக் கொலு நாளோ லக்கம் என்றும், அரிதாய்க் கூடும் மாலைக் கொலு