112
பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
இள மாணவ மாணவியர்க்குக் கணக்கை மிகுதியாகக் கற்பிப் பவன் கணக்காயன்.
ஐயன் - ஆயன் = ஆசிரியன்.
ஆயன் - ஆயான் - தந்தை, தமையன்.
-
ஆயான் - ஆஞான் = தந்தை.
ஆயான் - ஆசான் = மூத்தோன்,ஆசிரியன்,
ஆசாள் = ஆசிரியன் மனைவி, தலைவி.
-
=
ஆசு + இரியன் - ஆசிரியன் = குற்றம் நீங்கியவன் அல்லது குற்றங் கெடச் சொல்பவன். ஆசு - குற்றம். இரிதல் -இரிஞன் = பகைவன். ஒ.நோ: கலையன் - கலைஞன். ஆசிரியரும் நூலாசிரியர். நுவலாசிரியர், உரையாசிரியர் என மூவகையர். நுவலுதல் கற்பித்தல். முதலிரு கழக நூலாசிரியரும் தம் நூல் களில் அகவற் பாவையே ஆண்டமையால், அப் பாவிற்கு நூற்பா, அகவல், ஆசிரியப்பா என்னும் பெயர்கள் தோன்றின. ஆசிரியன் என்னும் சொல்லை, ஆ சார்ய (a-carya) என்று பிரித்தும் திரித்தும் வடசொல்லாக்குவர்.
குரு =
1. பருமன்.
2.கனம்.
"பசுமட் குரூஉத் திரள் போல"
3. பெருமை (உரி.நி.).
4. அரசன் (பிங்.)
5. ஆசிரியன் (சூடா.)
6.img.
"குருமொழி சிரத்தில் தாங்கினான்”
(புறம்.32).
(காஞ்சிப்பு. இரேணு.11).
குரு - குருசில் - குரிசில் = பெருமையிற் சிறந்தோன், தலைவன்.
"போர்மிகு குருசில்"
"போர்மிகு பொருந குரிசில்"
குரு - குருவன் = சமய வாசிரியன். ஒ.நோ.
சிறு - சிறுவன்.
"வானோர் குருவனே போற்றி"
(பதிற்றுப். 31:36).
(திருமுரு.276).
(திருவாச.5,68).