130
பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
"புலித்தொடர் விட்ட புனைமாண் நல்லில்" (முல்லைப்.62)
மாடங்கள் மதுரையில் மிகுந்தும் சிறந்தும் இருந்ததாகத் தெரிகின்றது.
"மாட மதுரை” (புறம்;32), "மாடமலி மறுகிற் கூடல்" (முருகு.71), "மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்" (மதுரை. 429) "நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்” (கலித்.92, "மதிமலி புரிசை மாடக் கூடல்” (திருமுகப் பரசுரம்).
கோநகர்களில் அங்கண நீரைக் கண்ணிற் படாமற் செலுத்துவதற்கு, ‘கரந்துபடை' என்னும் புதைசாலகம் இருந்தது. அது தெருநடுவிற் கட்டப் பட்டு யானைக் கூட்டம் மேற்செல்லும்படி, கருங்கல்லால் மூடப் பட்டிருந்தது. அதிற்சென்ற நீர், யானைத் துதிக்கை போன்ற தூம்பின் வாயிலாய் அகழியில் விழுந்தது.
66
பெருங்கை யானை யினநிரை பெயரும் சுருங்கை வீதி”
(சிலப்.14:64-5)
கோநகர்களில், ஊரைச் சுற்றிக் கோட்டை மதில் இருந்தது. அது புரிசை எனப்பட்டது. புரிதல் வளைதல். புரிசையுள்ள நகர்ப்பெயர்களே முதலில் புரி என்னும் ஈறு பெற்றன. கோட்டை என்பதும் வளைதற் பொருளதே. கோடுதல் வளைதல்.
66
உயர்வகலம் திண்மை அருமை இந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்".
என்னும் திருக்குறட்கேற்ப, (743) மதிலரண் மதில், எயில், இஞ்சி, சோ என நால்வகைப் பட்டிருந்தது.
மிக உயரமானது மதில்; ஞாயில் என்னும் ஏவறைகளையுடையது எயில்; செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டியது இஞ்சி; அரிய பொறிகளை யுடையது சோ.
66
வானுட்கும் வடிநீள மதில்”
(புறம்.18)
எய் இல் (ஏவறைகள்) உள்ளது எயில்.
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை”
(புறம் 201)
"செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி”
(கம்பரா. கும்ப. 160)
"சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த”
(சிலப். 17:35)