உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

66

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி”

17

என்னும் இளங்கோவடிகள் கூற்றுத் (சிலப்.10:18-21)தெரிவிக்கும். இதனாலும், பழையன் என்று பெயர் பெற்ற இரு குறு நில மன்னர் ருந்ததாலும், பாண்டியன் என்னும் பெயரைப் பண்டு என்னும் சொல்லினின்று திரிப்பர். ஆயின் காளையைக் குறிக்கும் பாண்டி அல்லது, பாண்டியம் என்னும் சொல்லினின்று அப்பெயர் வந்ததாகக் கொள்வதே மிகப் பொருத்தமாம்.

=

பாண்டி = எருது (பரிபா.20:17 குறிப்பு). பாண்டி - பாண்டியம் எருது, “செஞ்சுவற் பாண்டியம்” (பெருங். உஞ்சைக் 38:32). பாலை நிலத்தலைவனும் வயவனும் (வீரனும்) காளையெனப் படுதல் இங்குக் கவனிக்கத்தக்கது.

"மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து” என்னும் குறளும் (624) இங்கு நோக்கத்தக்கதாம்.

பாரதப் போர்க்கு முந்தியே பாண்டியர் இருந்ததால் பாண்டவன் என்னும் சொல்லைப் பாண்டியன் என்னும் பெயர்க்கு மூலமாகக் காட்டுவது, வரலாற்றறிவில்லார் கூற்றாம். பாண்டவ கௌரவர் குடியான பரத மரபு. தென்னாட்டினின்று வடநாடு சென்ற பாண்டியர் குடிக் கிளையே. இதன் விளக்கத்தை என் 'தமிழர் மரபு' என்னும் நூலுட் காண்க.

66

வேழ முடைத்து மலைநாடு மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து.

என்றார் ஔவையார்.

சோழ நாட்டிற்குப் புனல்நாடு, வளநாடு என்றும், சோழனுக்கு வளவன் என்றும் பெயர். சோறென்பது நெற் சோறே. சொல் = நெல். சொல் சொன்றி, சோறு.

-

சொல் இயற்கையாகவோ மிகுதியாகவோ விளைந்தது சோழ நாடெனப்பட்டது. சொல்லாக்கத் திரிவில் லகரம் ழகரமாவது இயல்பே.

ஒ.நோ: கல் - கள் - காள் - காழ் - காழகம் = கருமை.

கில் - கீழ் - தோண்டு. கெல்- கேழல் = தோண்டும் பன்றி.