உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இலக்கண அமைப்பு

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

இருதிணை: பொருள்களையெல்லாம், பகுத்தறிவுள்ளது, பகுத்தறிவில்லது எனப் பகுத்தது தமிழ்ப் பொதுமக்களே. காளையும் ஆவும் அஃறிணையில் ஆண்பாலும் பெண்பாலுமாயினும், காளை வந்தான், ஆவு வந்தாள் என்று யாரும் சொல்லும் வழக்கமில்லை. காளை வந்தது, ஆவு வந்தது என்று இரண்டையும் ஒன்றன்பாலிற் கூறுவதே மரபு.

முருகன் வந்தான், வள்ளி வந்தாள் என்று ஆண்பால் பெண்பால் (பகுத்தறிவுள்ள) மக்களுக்கே வகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வுலகிற் பகுத்தறிவுள்ள மக்களும் இறைவனுமே உயர்ந்த வகுப்பென்றும், பிற வெல்லாம் உயிருள்ளவையாயினும் இல்லவையாயினும் தாழ்ந்த வகுப்பே யென்றும், ஏற்கெனவே பொது மக்கள் வகுத்த இரு வகுப்பிற்கும், இலக்கணியர் முறையே உயர்திணை, அஃறிணை யென்று பெயர் மட்டும் இட்டிருக்கின்றனர். இலக்கணம் என்பது, ஏற்கெனவே ஏற்பட்டுள்ள மொழியமைதிகளுள் நல்லவற்றை மட்டும் கொண்டு, அவற்றிற்குப் பெயரிட்டுக் காட்டும் முறையேயன்றி, புதிதாக ஏற்பட்ட புலவர் படைப்பன்று. பகுத்தறி

டு

அளவையாகக் கொண்டு பொருள்களைப் பகுத்த இஃதொன்றே, பண்டைத் தமிழரின் அகக்கரண வளர்ச்சியைக் காட்டப் போதிய சான்றாகும்.

ஓரியலொழுங்கு

யான், யாம், யாங்கள்; நான், நாம், நாங்கள்; நீன், நீம், நீங்கள்; தான், தாம், தாங்கள் என்னும் மூவிடப் பகரப் பெயர்களும்;

அவன்

இவன்

உவன்

எவன்

அவள்

இவள்

உவள்

எவள்

அவர்

இவர்

உவர்

எவர்

அது

இது

உது

எது

வை

உவை

எவை

அவை

என்னும் சுட்டுப் பெயர் வினாப் பெயர்களும்; ஒன்றுமுதல் தொள்ளா யிரத்துத் தொண்ணூற்றொன்பது வரைப்பட்ட எண்ணுப் பெயர்களும், கொண்டுள்ள ஓரியலமைப்பை வேறெம்மொழியிலும் காணமுடியாது. பொருட்பால்

ஆரிய மொழிகளிற்போல் ஈறுபற்றிய பாலமைப்பின்றி, பொருள்களின் ஆண்மை பெண்மையும் ஒருமை பன்மையும் பற்றிய பாலமைப்பே தமிழிலுள்ளது.