உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

முயற்சியில் ஈடுபடுவது துறவறமாகும். மணஞ்செய்யாது உலகப் பற்றோடு தனியா யிருப்பது தனிவாழ்க்கை (celibacy) ஆகும். இவற்றுள் இல்லறத்தையே சிறந்ததாகக் கொண்டனர் தமிழர். இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய் படைத்திருப்பதே, அவர்கூடி வாழ்தற் பொருட்டே. இல்லறத்தாலும் ஒருவர் வீடுபேற்றை அடையமுடியும்.

66

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்”

அறன்எனப் பட்டதே யில்வாழ்க்கை அஃதும்

(குறள். 46)

(குறள் 49)

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று."

என்றார் தமிழ் அறநூலாசிரியர் திருவள்ளுவர். இவற்றையே,

'இல்லற மல்லது நல்லற மன்று'

எனச் சுருங்கச் சொன்னார் பிற்காலத்து ஔவையார். ஆடவரும் பெண்டிரும் கூடாது வாழ்வது அரிதாயிருப்பதுடன், துறவறத்திற்கும் இல்லறமே இன்றியமையாத துணையாகின்றது.

மேற்கூறிய மூவகை வாழ்க்கையுள், ஒவ்வொன்றும் நல்லதும் தீயதும் என இருதிறப்படும். இல்லறத்தில் ஒரே மனைவியுடன் வாழ்வது நல்லது; பல மனைவியருடன் அல்லது பல பெண்டிரைக் காதலித்து வாழ்வது தீயது. துறவறத்தில் உண்மையாயிருப்பது நல்லது; உள்ளொன்றும் புறம் ஒன்று மாயிருப்பது தீயது; அது கூடாவொழுக்கம் எனப்படும். தனி வாழ்க்கையில் ஒரு பெண்ணையும் காதலியாதிருப்பது நல்லது; மறைவாய்க் காதலித் தொழுகுவது தீயது. இவற்றுள் நல்லவற்றையே தமிழ மேலோர் போற்றினர்.

உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணையாயிருப்பதால் மனைவிக்கு வாழ்க்கைத் துணைவி என்று பெயர்.

இல்லறம்

மணப் பருவம் வந்த பின்பே, பலவகையிலும் ஒத்த ஓர் இளைஞனும் ளைஞையும், தாமாகக் கூடியோ தம் பெற்றோராற் கூட்டப்பட்டோ, கணவனும் மனைவியுமாகி வாழ்வது, ஆரிய வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழ மரபு. மணமானமைக்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் தாலி என்னும் மங்கலவணி இடம் பெறும்.

கணவனும் மனைவியும் எங்ஙனம் கூடியிருப்பினும் அவர்க்கு இன்றியமையாததாகும் காதல் என்பது இறக்கும் வரையும் ஒருவரை யொருவர் இன்றியமையாமை. கணவன் மனைவியரிடைப்பட்ட காதல், காமம் என்னும் சிறப்புப் பெயர் பெறும். அச்சொல் இன்று பெண்ணாசை என்னும் தீயபொருளில் வழங்கி வருகின்றது.